ஜி. பக்தவத்சலம், தாரமங்கலம்.

என் மகன் தற்போது பார்க்கும் வேலையிலிருந்து விலகி வேறு வேலைக்குச் செல்ல நினைக்கிறார். அது சிறப்பாக இருக்குமா? அடிக்கடி உடல்நலம் பாதிக்கிறது. என்ன வழிபாடு செய்யவேண்டும்?

உங்கள் மகன் ப. சத்தியநாராயணன் 14-6-1993-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். தங்கள் மகனின் வேலைக்குரிய குரு 12-ல் மறைந்துள்ளார். இவருக்கு அடிக்கடி, வேலை மாற்றும் எண்ணம் வந்துகொண்டே இருக்கும். அதிலும் இப்போது நடப்பு சுக்கிர தசையில் குரு புக்தி. எனவே 2021, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் வேலை மாற்றம் இருக்கும். அது நல்லவித மாகவே- கௌரவமான பணியாகவே அமையும். இவருடைய லக்னாதிபதி சுக்கிரனை சனி பார்ப்பதாலும், ஆரோக்கிய ஸ்தானத்தில் சனி அமர, அவரை செவ்வாய் பார்வையிடு வதாலும், எப்போதும் சற்று உடல் நலக்குறைவு இருந்துகொண்டே இருக்கும். உங்கள் மகனின் வேலை விருத்தி மற்றும் உடல்நலனுக்காக பழனி சென்று முருகரை தரிசனம் செய்வதோடு, போகர் பெருமானையும் வேண்டிக்கொள்ளவும். நடப்பிலுள்ள சுக்கிர தசை லக்னம் மற்றும் 8-ஆமிட தசை. ஓரளவு இடையூறுகளை ஏற்படுத் தத்தான் செய்யும். முழுவதும் கெடுத லாக இராது.

aa

Advertisment

ப் வி. அருணாசலம், வடலூர்.

எனக்கு சொந்த வீடு அமையுமா? எதிர்கால வாழ்வுக்குப் பொருளா தார வசதி எப்படியிருக்கும்?

7-4-1959-ல் பிறந்தவர். மகர லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். சொந்த வீடு அமையும் யோகமில்லை. நடப்பு சந்திர தசையில் ஒப்பந்தம், குத்தகை, தரகு என இவ்வகை அலைச்சல்மூலம் வாழ்க்கை நகரும். சிவபெருமானை வணங்கிவரவும்.

ப் ஆர். கார்த்திகேயன், ஓசூர்.

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடக்கும்? என் ஜாதகத்தில் ஏதாவது தோஷங்கள் உள்ளதா?

தனுசு லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். 24-10-1994-ல் பிறந்தவர். லக்னாதிபதி குரு 11-ல், உடன் புதன், ராகு, சுக்கிரன், சூரியன். ஆக, ஒரே கட்டத்தில் ஐந்து கிரகங்கள் சேர்க்கை. இவற்றை கடகச் செவ்வாய் பார்வையிடுகிறார். செவ்வாய் நீசம் எனினும், இடம்கொடுத்த சந்திரன் உச்சம். எனவே செவ்வாய் நீசபங்கம். சூரியனும் குரு மற்றும் சுக்கிரனுடன் இருப்பதால் நீசபங்கம். இது இருவித விபரீத ராஜயோகமுடைய ஜாதகம். நடப்பு குருதசையில் புதன்புக்தி 2024, மார்ச் வரை. அதற்குள் எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும். திருமணம் நடக்குமா என்று கேட்டிருக்கி றார். இவருக்கு திருமணங்கள் நடந்து கொண்டே இருக்கும். இத்தகைய ஜாதக அமைப்புடையவர்கள்தான் பேட்டைக்குப் பேட்டை மனைவி வைத்து மெயின்டெய்ன் செய்வார்கள். இதற்குரிய ஜாதகக் காரணம், ஒழுக்கத்துக்குரிய 5-ஆம் அதிபதி 8-ல் நீசமானதும், 7-ஆம் அதிபதி 11-ல் ராகுவுடன் அமர்ந்தது மாகும். ஜாதகத்தில் ஏதாவது தோஷ முள்ளதா என்று அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார். இது இவருக்கு யோகம் தரும் ஜாதகம்தான். ஆனால் மற்றவர்களுக்கு- குறிப்பா கப் பெண்களுக்கு இம்சை தரும் ஜாதகம். இவர் குடும்பத்தார் தினமும் கோளறு பதிகம் கூறவேண்டும். இந்த ஜாதகர் ஒன்று அரசியலுக்குப் போய்விடுவார். அல்லது நித்தியானந்தாவுக்குப் போட்டியாக ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கக்கூடும்.

ப் என். மணி, திருப்பூர்.

என் மகனுக்கு 29 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. தொழிலும் சரியில் லை. இந்தப் பிரச்சினை எப்போது தீரும்?

மகன் கார்த்திகேயன் 10-6-1993-ல் பிறந்த வர். கடக லக்னம், கும்ப ராசி, அவிட்ட நட்சத்திரம். லக்னத்தில் செவ்வாய் நீசம். லக்னாதிபதி 8-ல் சனியுடன் சேர்ந்து புனர்பூ யோகம் பெறுகிறார். குடும்ப ஸ்தானாதிபதி சூரியன், கேதுவுடன் ராகு பார்வையின் கிரகண நிலை பெறுகிறார். ஆண்களுக்கு அவசியமான 3-ஆம் அதிபதி 12-ல் மறைவு மற்றும் அம்சத்தில் நீசம். 7-ஆம் அதிபதி 8-ல். "பத்தும் பத்தாதுக்கு பத்மினி நாச்சியார்' என்ற கதையாக ஏழரைச்சனியும் உள்ளது. இவையனைத்துக்கும் காரணம் பூர்வபுண்ணிய குற்றமேயாகும். 5-ல் ராகு இருப்பதும், 5-ஆம் அதிபதி நீசமானதும், போன ஜென்ம பாவத்தையும் முன்னோர் செய்த தீச்செயலையும் சுட்டிக்காட்டுகிறது. நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி 2024, மார்ச் வரை. அதற்குள் திருமணமும் வேலையும் கிடைத்துவிடும். அனேகமாக உணவு சம்பந்தமான வேலை அமையும். பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை இராமேஸ் வரம் சென்று வரவும். மேலும் சகட யோகம் நீங்க கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயம் சென்று வணங்கவும். குலதெய்வக் குறைகளும் தென்படுகின்றன. திருமணம் விரைவில் நடக்க, மயிலாடுதுறை அருகிலுள்ள திருமணஞ்சேரி சென்று வழிபடவும். உங்கள் மகனின் திருமணம் நடப்பதற்கு, திருப்பதியில் மொட்டை போடுவதாக நீங்கள் வேண்டிக் கொள்ளவும்.

ப் ஒரு வாசகர், சுரண்டை.

என் மகளுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. தற்போது விவாகரத்து வழக்கு நடக்கிறது. விவாகரத்து கிடைக்குமா? மகளுக்கு மறுமணம் நடக்குமா?

மகள் இராமலட்சுமி 25-9-1989-ல் பிறந்தவர். மகர லக்னம்; கடக ராசி, பூச நட்சத்திரம். மருமகன் விஜய் பார்த்தசாரதி 6-3-1987-ல் பிறந்தவர். துலா லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். பெண் ஜாதகத்தில் லக்னம், ராசி இரண்டிற்கும் நாக தோஷமுள்ளது. பையன் ஜாதகத்தில் நாகதோஷம் இல்லை. ஆனால் செவ்வாய் தோஷம்- பரிகார செவ்வாய் தோஷமுள்ளது. பெண்ணின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் ஒரே ராசியில், ஒரே நட்சத்திர சாரத்தில் இணைந்திருக்கின்றனர். சூரியன், செவ்வாய் இணைவு கண்டிப்பாக மணவாழ்வில் பிரிவைக் கொடுக்கும். மேலும், 7, 8-ஆம் அதிபதிகள் புதன், சூரியன் பரிவர்த்தனை. நடப்பு சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி. கண்டிப்பாக கணவரிடமிருந்து பிரிவு உண்டு. 36 வயதிற்குள் மறுமணம் நடக்கும். மறுமணம்மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த இரு ஜாதகங்களிலும் தோஷ சாம்யம் இல்லை. நிவர்த்தியில்லை. இருவர் ஜாதகத்திலும் புனர்பூ யோகமுள்ளது. சூரியன், செவ்வாய் ஒரே நட்சத்திரக் காலிலுள்ள ஜாதகிகள், விதவையாகும் நிலை உண்டாகும். இதற்கு இவர்கள் பிரிவதே நல்லது. சூரியன், செவ்வாய் இணைவுள்ள ஜாதகர்கள், தில்லைக் காளியை வணங்கவும். இந்த கோவிலில் முதலில் அம்மனுக்கு வெள்ளைப் புடவைதான் கட்டியிருப்பார்கள். குங்கும அர்ச்சனை செய்யச் செய்ய அந்த வஸ்திரம் சிவப்பான நிறத்துக்கு வந்துவிடும். இந்த சிதம்பரம் தில்லைக் காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும் செய்யவேண்டும். மேலும் இவ்வித தோஷமுள்ள பெண்கள், வீரபத்திரருக்கு செவ்வாய்க்கிழமை வெற்றிலை மாலை சாற்றி வழிபடவும். நாகதோஷமுள்ள ஜாதகிக்கு, நாகதோஷமில்லாத ஜாதகரை சேர்த்துள்ளனர். அதனால் மணவாழ்வில் தடை ஏற்பட்டுள்ளது.