ருவரின் திருமண முகூர்த்தநாள்தான் அவரின் திருமணத்திற்குப் பின் அமையும் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவி ஒற்றுமை, பிரிவு, புத்திரன், தொழில், பொருளாதாரநிலை, பதவி, புகழ் என அனைத்திலும் உயர்வு- தாழ்வினைத் தீர்மானித்துப் பலனை அடையச் செய்யும் என்பதைப் படித்துவிட்டு, நிறைய வாசக அன்பர்கள், தங்களின் திருமணநாள் ராசியில் கிரகங்கள் அமர்ந் துள்ள நிலையினை ஆய்வு செய்து அறிந்து, தங்களின் திருமணத்திற்குப்பிறகு குடும்ப வாழ்வில் தமிழ் முறை ஜோதிடத் தில் கூறியுள்ள பலன்களைத்தான் அனுபவித்து வருகின்றோம்; நடைமுறை வாழ்வில் சித்தர்கள் கூறியுள்ள பலன்கள் சரியாகவே உள்ளதென்று கூறியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இன்றையநாளில் திருமண சமயத்தில், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருந்து, அதே போன்று ஒரு பெண்ணுக்கு ஆணைப் பிடித்திருந்து, இருவரின் பெற்றோர்களுக்கும் பிடித்திருந்தும். "பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், ராசிப் பொருத்தம் இல்லை; மேலும் செவ்வாய் தோஷம், ராகு, கேது, சர்ப்பதோஷம் உள்ளது; லக்னத்திற்கு 7, 8-ஆமிடம் சுத்தமில்லை' என்று சில ஜோதிடர்கள் கூறுவதைக் கேட்டுவிட்டு, நல்லபடியாக நடக்கவேண்டிய திருமணத்தைத் தடைசெய்து விடுகின்றனர். நல்ல சம்பந்தம் கைநழுவிப் போய்விடுகிறது.

சித்தர்கள் அறிந்து கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்தில், இதுபோன்று பொருத்தங் கள், தோஷங்களைப் பார்ப்பதில்லை. திருமணம் செய்துகொள்ளப் போகும், ஆண்- பெண் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருந்து, பெற்றவர்களுக்கும் பிடித் திருந்தால், பிறப்பு ஜாதகத்திலுள்ள தோஷங்களை நிவர்த்திசெய்யும், பரிகாரம் தரும் நிலையில் கிரக அமைப்புகள் உள்ள நாளில் திருமணம் செய்தால், பிறப்பில் உண்டான அனைத்து தோஷங்களும், பரிகாரமாகி நீங்கிவிடும்.

Advertisment

f

ஒருவரின் பிறப்பு ஜாதகப் பலன்கள், அவரின் திருமணநாள் வரைதான் நன்மை- தீமைப் பலன்களைத் தரும். திருமணத்திற்குப்பின்பு அமையும் குடும்ப வாழ்க்கையில் அனுபவிக்கும் நன்மை- தீமைகளை, உயர்வு- தாழ்வினை அவர் களின் திருமணநாளன்று உள்ள கிரக அமைப்புதான் பலன்களைத் தந்து அனுபவிக்கச் செய்யும். திருமணத்திற்குப்பிறகு பிறப்பு ஜாதகப் பலன் நடக்காது. இதற்கு சித்தர்கள் கூறும் காரணத்தை அறிவோம்.

இந்த பூமியில் ஆண்- பெண் இருவரின் பிறப்பு நிலை ஒன்றுபோல்தான் உள்ளது. ஒவ்வொருவரும் பிறக்கும்போது, அவரவரின் முன்பிறவி கர்மவினைகளைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு அதனை அனுபவித்துத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றனர்.

பிறப்பின்போது ஒரு உயிர்தான். ஆனால் திருமணத்திற்குப்பிறகு ஆண்- பெண் இணைந்து கணவன்- மனைவி என்ற நிலை ஏற்பட்டவுடன், இருவரின் முற்பிறவி பாவ- சாப- புண்ணியப் பதிவுகளின் தாக்கம் குடும்பத்தில் ஏற்பட்டு இருவரையும் அனுபவிக்கச் செய்கிறது.

குடும்ப வாழ்வு காலத்தில் பலவிதமான நிலைகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வரும். திருமணத்திற்கு முன்பு ஒருவிதமான வாழ்க்கை; திருமணம் முடிந்து குடும்ப வாழ்வில் ஒரு மாற்றம். முதல் குழந்தை, அடுத்து இரண்டாவது குழந்தை என பிறந்தபின்பு நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு என குடும்பத்தில் ஒவ்வொரு உயிரும் கூடி இணையும்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வரும். இந்த மாற்றங் களுக்குக் காரணத்தையும், காலத்தையும் அறிந்துகொண்டால்தான் விதியை மதி யால் தடுத்து நல்ல வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளமுடியும்.

ஒருவரின் பிறப்பு நாள் அவருக்கே தெரியாமல் நிகழ்வது. அதேபோன்று ஒருவர் இறக்கும் நாளும் அவருக்கே தெரியாமல் நிகழ்வது. முற்பிறவி பாவ- சாப- புண்ணியபடி, அதனை அனுபவித்துத் தீர்க்கும் நிலையில் கிரகங்கள் அமைந்துள்ள நாளில் பிறக்கிறோம். ஆயுள் முடியும் நாளில் நமக்குத் தெரியாமலேயே மரணமடைகி றோம். அவரவர் பிறப்பையும் இறப்பையும் அவரவர் தீர்மானிக்கமுடியாது. ஆனால், திருமணநாளை மட்டும் அவரவரே தீர்மானித்து மணம்புரிந்து கொள்கிறோம்.

இது முன்ஜென்ம கர்மவினைகளை அறிந்து, இல்லற வாழ்வை இன்பமானதாக அமைத்துக்கொள்ள இயற்கை தந்த சந்தர்ப்பம்; நமது உரிமையாகும். இதனை அறிவால் அறிந்து சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் பொறுப்பாகும்.

திருமணம் செய்யும் முகூர்த்த நாளை ஆண்- பெண் இருவரின் ஜாதகத்திலுள்ள பாவ- சாப- தோஷங்களை நன்கு ஆய்வுசெய்து அறிந்து, திருமணத்திற்குப்பின்பு அமையும் குடும்ப வாழ்வில் எல்லா தோஷங்களையும் தடுத்து, நன்மை தரும் நிலையில் கிரகங்கள் அமைந்துள்ள முகூர்த்தநாள் பார்த்து திருமணம் செய்துகொண்டால் அவர்களின் இல்லறம் இனிமையானதாக, வளமானதாக அமையும்.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் ஆட்சி, உச்சம், குரு பார்வை பெற்று, பலவிதமான நன்மைகளையும் உயர்வையும் தரும் நிலையில் அமர்ந்து பிறந்திருந்தாலும், திருமணநாளன்று கிரகங்கள் நல்லநிலையில் இல்லாமல், பாவ- சாப- தோஷங்களைத் தரும் நிலையில் இருந்துவிட்டால், திருமணத்திற்கு முன்பிருந்த தொழில், செல்வம், செல்வாக்கு, குறையும், குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, கடன், நோய் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு, நன்மைகள் அடையமுடியாமல் தடைப்பட்டுக் கொண்டேவரும்.

ஒருவர் தன் பிறந்தநாளில் குறித்துவைத்த பிறப்பு ஜாதகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களோ, அதேபோன்று திருமண முகூர்த்தநாள் ஜாதகத்திற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். திருமணநாளன்று மட்டும் கிரகங்கள் நன்மைதரும் நிலையில் இருந் தால், வருடத்தில் 12 மாதங்களிலும், எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் திருமணம் செய்யலாம். நல்ல முகூர்த்த நேரம், நல்ல நாள் என எதுவும் பார்க்கத் தேவையில்லை. கிரகங்கள்தான் பலனைத் தருமே தவிர, நாளும் நேரமும் எந்த பலனை யும் தராது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரின் பிறப்பு ஜாதகத்தில் எத்தனை தோஷமான பதிவுகள் இருந்தா லும், அவற்றைத் தடுக்கும் சக்திமிக்க பரிகாரப் பலன் தருவது அவரவர் திருமண நாள் மட்டுமே என்பது சித்தர்கள் காட்டிய வழியாகும். தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர் பெருமக்கள் பாவ- சாப- தோஷம் நீங்க, வரும்முன் காத்துக்கொள்ள வழிமுறை களைதான் கூறுகிறார்களே தவிர, வழிபாடு களைக் கூறுவதில்லை. சித்தர்களும், அவர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடமும் அறிவுரை கூறுவதில்லை. வாழ்வில் உயர்வுபெற நல்ல நடைமுறை வழியைக் கூறுவது. வாழ்வில் உயர்வுபெற நம்பிக்கை உதவாது. நடை முறை செயல்தான் உதவும். நம்பிக்கை மாயை; நடைமுறை உண்மை.