மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 4, 12, 13, 21, 22, 30, 31. பாதக நாட்கள்: 5, 6, 19, 20, 26, 27.

Advertisment

அஸ்வினி: இம்மாதம் உங்கள் தோற்றம் சீராகவும் நேர்த்தியாகவும் இருக்கும்விதமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் வாரமே அநேகரை சந்திக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். 8, 9 தேதிகளில் சுய கௌரவம் மேலோங்கும். ராகுவின் பக்கத்துணையால் எழுத்தாளர்கள் புதுக்கோணத்தில் சிந்தனையைச் செலுத்தலாம். சுக்கிரனின் இருக்கை சீராகத் தென்படவில்லை. மாமனாரிடம் எதுவும் எதிர்பார்க்க இயலாது. புதனும் எச்சரிக்கிறார். தகுந்த ஆதாரமில்லாமல் பிறருக்கு வாய் உத்தரவாதத்தால் கடன் கொடுப்பது கூடாது. புதனுக்காக மூன்று பேபிகான் (மக்காச்சோளப் பிஞ்சு) வாங்கி, அதில் பச்சை நூல் சுற்றி வடக்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடுவது நல்லது. கடன் தொல்லை போகும்.

பரணி: குரு எட்டில் இருக் கிறார். இப்போது உங்கள் வயது 22 எனில் தந்தையின் ஆரோக்கியம் பின்னடை வாகும். பல்வலி போன்றவை யும் பதம்பார்க்கும்.

எந்தத்துறையினரும் மூன்றாவது வாரம் பேச்சில் வேகம் கூடாது. சனி பகவானும் துணைவர மறுப்பார். சனிக் கிழமையன்று வேலையில்லா- நலிந்த பட்டதாரிக்கு உதவுதல் நன்று. அவர்களுடைய வேலை வாய்ப்புக்கு பக்கபலமாக செயல்படலாம். 6-ல் சூரியன், செவ்வாய், புதன். மாதர்களுக்கு ரத்த சம்பந்தமான பின்னடைவு வரலாம். இரண்டு செம்பவள ராசிக்கல் வாங்கி, செவ்வாய்க்கிழமை தென்திசை நோக்கி திருஷ்டி சுற்றி ஒன்றை கோவில் கிணற்றில் போடவும். ஒன்றை வைத்துக் கொள்ளலாம்.

Advertisment

கிருத்திகை 1-ஆம் பாதம்: கூட்டுக் குடும்பத்தில் இணைந்து வாழும் தம்பதிகள் உறவை பலப்படுத்தும்விதமாக நடந்துகொள்வது நன்று. ஒரு தீய காரியத்தைச் செய்யாமல் விமோசனமில்லை என்று தோற்றம் உண்டானாலும், பழிக்கத்தக்கவை வேண்டாம். சனி, கேது, பக்கத்துணை வரமாட்டார்கள். இம்மாதம் சனிக்கிழமைகளில் இருட்டான அறையில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். கேதுவுக்காக வேப்ப எண்ணெய்யில் சிறிது கற்பூரம் கலந்து சனிக்கிழமை திலகமிடல் நன்று. வீடு தென்திசை நோக்கி இருந்தால் செவ்வாய், சனியன்று வாசலில் எட்டுப்புள்ளி கோலம் போடுதல் கூடாது.

ரிஷபம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 23, 24. பாதக நாட்கள்: 1, 7, 8, 21, 22, 28, 29.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: வெற்றி குறித்த யோசனைகள் இம்மாதம் முதலிடம் வகிக்கும். பணத்திற்கான வழிவகை தெரியாமல் முயற்சிகள் கூடாது. சூரியன் ஒரு ஆண் வாரிசைத்தர முயல்வார். செவ்வாயைத் திருப்திப்படுத்த வேண்டும். இளம் காதலர்கள் பச்சைக்கொடிக் காகக் காத்திருந்தால் வெற்றி. 12, 13, 14 தேதிகளில் இருப்பிடத்தைஅலங்கரிக்க மனம் உந்துதலைத் தரும். விரும்பியதை வாங்கலாம். நல்ல சுபாவமுள்ள ஒரு பணக்காரனாக உலா வரலாம். இம்மாதம் சனி ஹோரையில், தண்ணீர் பருகுவதைத் தவிர்ப்பது நன்று. கேதுவுக்காக புரோ கிதர்களுக்கு இயன்ற பொருளுதவி செய்வது நல்லது. வயதுக்கு வராத பெண் குழந்தைக்கும் உதவலாம்.

ரோகிணி: அலுவலகத்தில் எவரிடமும் எதிர்வாதம் புரியாமல் பணிந்துபோதல் நன்று. இம்மாதம் ஆற்று நீரில் நீராடினால் பீடை அகலும். குருவருளைப் பெறலாம். சனி பகவான் முதுகெலும்பு சார்ந்த உபாதையைத் தர முயல்வார். வயோதி கர்கள் சக்திக்குமீறிய வேலைகளைத் தவிர்ப்பது நன்று. மனைவி பெயரில் இம்மாதம் அதிக முதலீடுகள் வேண்டாம். மூலப்பொருள் விற்போர் (ராமெட்டீரி யல்ஸ்) அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.

21, 22, 23 தேதிகளில் அரசு சார்ந்த சுபச்செய்திகள் வரலாம். நோய்வாய்ப் பட்ட மாதர்களுக்கு உடல்நலம் தெம்பை ஏற்படுத்தும், மாதர்கள் கனகதாரா ஸ்தோத்திரம், அன்னபூர்ணா ஸ்தோத்திரம் படித்தல் மிக நன்று.

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்:

அழகு சாதனத் தயாரிப்பாளர்கள், பியூட்டி பார்லர் நடத்துவோர், பெண்களுக்கான ஆயத்த ஆடை தயாரிப்போருக்கு அதிக லாபம் வரும் மாதம். 14, 16 வயதாகியும் பூப்பெய்யாத பெண் குழந்தைகள் இருந்தால் பருவமடையச் செய்ய கிரகநாதர்கள் முயல்வார்கள். தடைகள் தொடர்ந்தால் வெண்ணிற நந்தியாவட்டைப் பூ போன்றவற்றை அல்லது முல்லை, அடுக்கு முல்லைப் பூவை கிணற்று நீர், ஆற்று நீரில் தூவி வணங்கினாலும் சுக்கிரனின் அருளைப் பெறலாம். கன்னியில் இருக்கும் செவ்வாயின் நற்பலனைப் பெற செவ்வாய் ஹோரையில் தேன் கலந்த நீரைப் பருகுதல் நன்று.

மிதுனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 2, 3, 4, 10, 11, 23, 24, 30, 31.

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: ராசியில் ராகு, 4-ல் செவ்வாய்- பல நன்மை களை அள்ளித் தரவேண்டும். ஆனால் அவர் இருக்குமிடம் கன்னி. கூடவே சூரியனும் இருக்கிறார். முதல் வாரம் 5, 6 தேதிகளில் பலவித நன்மைகளை எதிர்பார்க்கலாம். இரண்டாவது வாரம் குடும்பத்தில் எவருக்காவது ஆரோக்கியக் குறைகள் தோன்றும். கருப்புநிறப் பிராணிகளுக்கு உணவு தருதல் நன்று. சுக்கிரன் 5-ல். பண ஆசை நிமித்தம் தாய்- தந்தையரைப் பகைத்து மணம்புரிதல் கூடாது. மாடு வளர்ப்போர், வீட்டில் பசு ஆண் கன்று ஈன்றால், மகன் இருந்தால் அரசு உத்தியோகம் புகழைத் தரும்.

திருவாதிரை: இம்மாதம் மூன்றாவது வாரம் 16, 17 தேதிகளில் கலந்துகொள்ளப் போகும் சம்பவம், இன்பம்- துன்பம் கலந்ததாக இருக்கும். குரு விருச்சிகத்தில் இருப்பதால் தங்கை மகனுக்கு உதவிபுரிதல் நன்று. சந்திரனுக்காக பால், பச்சரிசி, வெண்மை நிறத் துணி தானம் சிறந்தது. நெடுங்காலம் உபயோகித்த கிணற்றை மூடி, அதன்மேல் வீடு கட்டுதல் நல்லதல்ல. புதன் சுக்கிரனுடன் துலாத்தில் இருப் பதால், பொய் சொல்லிக் கடன்பெறுதல் கூடாது. கருமைநிறப் பசுவுக்கு அகத்திக் கீரை கொடுப்பதால் மனைவியின் உதிரப் போக்கு நோய் சீரடையும்.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: "புகழுடையான் புனர்பூசத்தில் பிறந் தோன்; புண்ணியவான்; நடுவயதில் தரித்திரமுள்ளான்; இகமுடையான் பின் வயதில் மன்னராலே; எவர்களும் தூஷிப்பர்' என்பது ஜோதிடக்கவி. அறுபதாம் வயதில் செல்வமும் புகழும் சுலபமாகுமாம். சனி மட்டும் பலம்பெற்றால் பணக்காரராக்கி அழகு பார்ப்பார். மிதுனத்திற்கு 7-ல் சனி, ராகு இடம் பெற்றுள்ளதால், இப்போது வயது 22 என்றால் கண் உபாதை வரலாம். பணவிஷயத்தில் இம்மாதம் எவருக்கும் உத்தரவாதம் கொடுப்பது கூடாது. அதிதேவதை மந்திரம் கூறல் நன்று. ராம காயத்ரியும் பொருத்தமானது.

"ஓம் தஸரதாய வித்மஹே

சீதா வல்லபாய தீமஹி

தந்நோ ராம: ப்ரசோதயாத்.'

கடகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 10, 11, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 5, 6, 12, 13, 26, 27.

12rasi

புனர்பூசம் 4-ஆம் பாதம்: எரிச்சல் களும் சச்சரவுகளும் நிறைந்த இம்மாத முதல் வாரம், அண்ணன்- தம்பி இருந் தாலும் உதவமாட்டார்கள். மாணவர் களின் பாதை மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குரு பகவான் செவ்வாய் வீட்டில் உள்ளார். இரண்டாவது வாரம் சிலருக்கு திருமணம் சார்ந்த சுபச்செய்திகள் வரும். 11, 12 தேதிகளில் அக்காள்- தங்கைகளின் ஆதரவைப் பெறலாம். வயிற்று உபாதை வரும். 12-ல் ராகு. பேச்சில் நாவடக்கம் வேண்டும். இம்மாதம் நான்கு நாட்கள் சமையல் கூடத்தில் ஒருபொழுது உணவுண்ணல் நல்லது. இரவில் திருட்டுப் போவதுபோல் கனவு கண்டால், ஒரு கருப்புத்துணியில் நான்கு மரக்கரித்துண்டும், நான்கு மை டப்பாவும் முடிந்து தொங் கவிடவும்.

பூசம்: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது என வள்ளுவர் 439-ஆவது குறள் மூலம் உணர்த்துகிறார். சூரியன் கன்னியில் இருப்பதால், தாய்- தந்தையரிடமும், மற்றவரிடமும் பணிவு வேண்டும். மூன்றாவது வாரம் அதிக பயணங்களை எதிர்கொள்ள வேண்டும். வீட்டில் அன்றாட செலவினங்கள் எல்லை மீறும். 17, 18 தேதிக்குமேல் எல்லா சூழ்நிலையும் சாதகமாகிவிடும். 19, 21-ல் இனம்புரியா கவலைகள் மற்றும் சில தியாகங்களை எதிர்கொள்ள நேரிடும். கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பது நல்வழிப் படுத்தும்.

"ஹரா மகேஸ்வரி முக்தா ஹம்ஸிநீ ஹம்ஸவாஹநா/

பாக்யா பலகரீ நித்யா பக்திஹம்ய பயாபஹா//

காலை 11 முறை பாராயணம் செய்தால் துர்க்கை அருள்பெறலாம்.

ஆயில்யம்: இம்மாதத்தில் கடைசி வாரம் சில பொறுப்புகள் உங்களைவிட்டு அகன்றுவிடும். 26, 27 தேதிகளில் உங்களை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். வேலைவாய்ப்புக்கு வழிசெய்ய செவ்வாயை மனதில் கொள்ளவேண்டும். 7, 12, 13, 17, 18, 26, 27 ஆகிய தேதிகள் உத்தியோகத்தைப் பெற்றுதர துணைவரும். அனுமன் ஆலயத்திற்கு ஒளிவிளக்கு வசதி செய்து கொடுப்பது நல்ல பரிகாரம். மஞ்சள்நிற ஆடை புரோகிதர்களுக்குக் கொடுப்பதும் நல்லவை நடைபெறச் செய்யும். வேண்டாத- தேவையற்ற பொருட்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் இருந்தால் அகற்றிவிடவும்.

சிம்மம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 4, 12, 13, 21, 22, 30, 31. பாதக நாட்கள்: 1, 7, 8, 15, 16, 28, 29.

மகம்: மாதத்தின் முதல் வாரம் தயக்கத்துடன் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். யாரோ ஒருவர் உங்களை சிக்கலில் மாட்டிவைக்க அரும்பாடுபடுவார். ஆனால் 5, 6 தேதிகளில் எல்லாமே சீரான பாதையில் செல்லும். சூரியன், செவ்வாய் 2-ல் இருப்பதால், மனைவியின் சொத்து விவகாரங்களில் உங்களுடைய தலையீடு வேண்டாம். வீண் மனபேதம் ஏற்படும். இம்மாதம் அடுத்தவர் உபயத்தில் உணவுண்ணுவதைத் தவிர்த்தல் நன்று. குரு பகவான் நாலில் தனித்துக் காணப்படுவதால், உடலழகு பிறர் கண்ணில் படும்படியாக ஆடையின்றி நீராடுவது கூடாது. பாதிப்பைத் தருவார்.

பூரம்: இம்மாதம் மூன்றாவது வாரம் கூடுதல் வருமானத்தை எதிர்பார்க்கலாம். காதல் வலையில் சிக்கிய இளம் ஜோடிகளுக்கு பச்சைக்கொடி காட்டப்படும். 17, 18 தேதிகள் உத்தமம். வியாபாரிகள் இம்மாதம் இடத்தை விரிவாக்கம் செய்யலாம். வெளிநாட்டு வியாபாரமும் தடையின்றி கூடுதல் லாபத்தை ஈட்டித்தரும். 24 வயதுவரை ஆண் சந்ததியை வியாபாரத்தில் ஈடுபட வைப்பதை கேது தடை செய்வார். இப்போது வயது 48 எனில் மகன் பெயரில் இம்மாதம் சொத்து வாங்கினால் நிலைக்காது. இம்மாதம் ஆண்குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினால் உப்பு கலந்த பண்டமும் பரிமாறவேண்டும்.

உத்திரம்: இம்மாதம் நீண்ட நாள் பகை முடிவுக்கு வந்துவிடும். ஆடம்பரப் பொருட்களை மனம்போல் வாங்கும்விதமாக பணப்புழக்கம் ஏற்படும். உத்தியோகம் பார்க்குமிடத்தில் நல்ல பெயர் வாங்க அரும்பாடு படவேண்டும். இம்மாதம் பிரிந்த தந்தையின் நினைவுகள் மிகையாகும். இரும்பு கலந்த எவர்சில்வர் பாத்திரங்களில் உணவுண்ணல் நல்லது. எவரிடமும் மின் உபகரணங்கள் இனாமாகப் பெறுதல் கூடாது. நீலக்கல் மோதிரம் அணிந்திருந்தால் இம்மாதம் அதனை அணிதல் கூடாது. யானைத் தந்தத்தினாலான அலங்காரப் பொருட்களும் விலைகொடுத்து வாங்கல் கூடாது. விநாயகப் பெருமானை மாலை நேரம் வணங்கல் சிறப்பு.

கன்னி

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 15, 16, 23, 24. பாதக நாட்கள்: 2, 3, 4, 10, 11, 17, 18, 30, 31.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் கோபத்தை அடக்குவதன்மூலம்தான் சில நல்லவற்றைப்பெற இயலும். குடும்ப விவகாரங்களில் மென்மையான போக்கு வெற்றியைத் தரும். தலைவலியிலிருந்து தப்பிப்பது கடினம். இனம்புரியாத உபாதை மேலோங்கும். தொழிற்சாலை வைத்திருப்போர் இம்மாதம் பெரிய மாற்றங்கள் வேண்டாம். செவ்வாயின் அருளால் பிற மாநிலங்களில் தொழில் நடத்துவோருக்கு நல்ல மாற்றங்கள் திருப்தியைத் தரும். சட்டத்தின பிடியில் அவை மாட்டியிருந்தாலும் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பிறர் அபகரித் திருந்தாலும் உரிமையை நிலைநாட்ட முயலலாம்.

ஹஸ்தம்: ராசிக்கு இரண்டில் சுக்கிரன், புதன் இருக்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் வாழ்வோர், நீண்டநாள் சந்தான பாக்கியம் இல்லையெனில், ஒரு மாதம் பிற இடங்களில் தங்கினால் வம்சவிருத்திக்கான முயற்சி நற்பலனைத் தரும். கணவன்- மனைவி மதுவுக்கு அடிமையெனில், இம்மாதம் உடலுறவைத் தவிர்க்காவிடில் புதன் தோல் வியாதியைத் தந்துவிடுவார். மனைவி பெயரில் பூர்வீக சொத்தாக எஸ்டேட், மாந்தோப்பு போன்றவை இருந்தால் ஓரளவு லாபத்தைப் பெற்றுத்தரும். கேதுவும், சனியும் 4-ஆமிடமான தனுசில் இருப்பதால், நீண்டநாள் உடல் உபாதைக்கு இம்மாதம் ரண சிகிச்சையைத் தவிர்ப்பது நன்று.

சித்திரை: இம்மாதம் ஒரு முக்கிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிவோர் கவனமுடன் செயல்படவேண்டும். 25, 27 தேதிக்குமேல் பணவரவின் தன்மை மனதிற்கு உற்சாகத்தைத் தரும். பெண்கள் குடும்பத்தில் கௌரவமாக மதிக்கப்படுவார்கள். சிலருக்கு நீண்டநாள் கனவு நிறைவேறும். சனி பகவானைத் திருப்திப்படுத்த இம்மாதம் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுய சம்பாத்தியம் செய்வோர் அதிக முதலீடுகள் வேண்டாம். கேது, சனி சேர்க்கை சீராகத் தென்படவில்லை. ஆஸ்துமா, மூட்டுவலி வந்தால் ஒரு கருப்புத்துணியில் எட்டு ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து, வீட்டின் இருட்டறையில் வைப்பது நன்று.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 93801 73464