"மழைப்பேறும் பிள்ளைப்பேறும் மகாதேவனுக்குக்கூட தெரியாது' என்பது பழமொழி.

மழை பெய்யப்போவதைத் துல்லியமாக யாரும் கணித்துக்கூற இயலாது. இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் மழை பொழியும். அதேபோல் நிறைமாத கர்ப்பிணிக்கு எப்போது மகப்பேறு நிகழும் என்பதும் துல்லியமாகக் கணித்துக்கூற இயலாது என்பது நமது முன்னோர்களின் அனுபவக் கருத்து.

ஒருவருக்கு ஜோதிடப் பலன் பார்க்க வேண்டுமானால் அவருக்கான ஜனனகால ஜாதகத்தை வைத்துதான் பார்க்கமுடியும். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு வரின் விதியும் பிறப்பிலேயே தீர்மானிக்கப் படுகிறது. பிறந்த நேரத்தினைக்கொண்டே லக்னம், ராசி, நட்சத்திரம், தசாபுக்திகள் என அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. சுகமாகப் பிறக்குமென்று மருத்துவர்கள் கூறும் குழந்தை அறுவை சிகிச்சையிலும், ஆபரேஷன்மூலம்தான் பிறக்கும் என்று கூறும் குழந்தை இயற்கையாகப் பிறந்து விடு வதையும் அன்றாட நிகழ்வில் பார்க்கிறோம்.

Advertisment

dd

அதாவது பிரசவ காலத்தில் குழந்தை அல்லது தாய்க்கு ஏற்படும் இடர்களைத் தவிர்க்க அறுவை சிகிச்சைமூலம் குழந்தை யைப் பிரசவிக்கச் செய்யும் சூழல் உருவாகி விடுகிறது. இறைவன் பூவுலகில் பிறப்பெடுக்க அனுமதித்த நேரம் வந்தவுடன் எந்த முறையிலா வது ஜனனம் நிகழ்ந்துவிடும். இக்கட்டான காலகட்டத்தில் சிலர் பிரசவநேரம் குறிக்க ஜோதிட ஆலோசனையை அணுகுகிறார்கள். சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறிப்பது எப்படி என்பதைக் காணலாம்.

ஒரு ஜாதகத்தில் விதியை நிர்ணயம் செய்யும் லக்னம், லக்னாதிபதியின் நிலை மிக முக்கியம். இவர்கள் மறைவு ஸ்தானத் துடன் சம்பந்தம் பெறாமலிருப்பதும், திதி சூன்ய பாதிப்படையாமல் இருப்பதும் அவசியம். லக்னம் மற்றும் லக்னாதிபதியை சுப கிரகங்கள் பார்க்குமாறு அமைத்தல் நலம். லக்னத்தின் ஆரம்பம் மற்றும் முடிவடையும் லக்னம் அமையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். லக்னத்தின் நடுப்பகுதியை அனு சரித்து நேரம் குறிப்பது சிறப்பு.

இரண்டாவதாக, குழந்தைக்கு பிறப்பு கொடுக்கும் தாய்- தந்தைபற்றிக் கூறும் சூரிய, சந்திரர்கள் சுபவலுப் பெறுவது அவசியம். ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் ராகு- கேதுக்களால் கிரகணம் அடையாதவாறும், சனி, செவ்வாய் சம்பந்தமில்லாதவாறும் இருக்கவேண்டும்.

சூரியன், சந்திரன் அசுபர்களால் பலம்குறைந் தால் லக்னரீதியான 4-ஆமிடம் எனும் தாய் ஸ்தானமும், 9-ஆமிடமான தந்தை ஸ்தானமும் சுப வலுப்பெறுமாறு அமைக்கவேண்டும். சூரியனும், ஒன்பதாமதிபதியும் பாதிக்கப்படும் போது குழந்தையின் தந்தைக்கு முன்னேற்றம் பாதிக்கப்படும். குழந்தைக்கு ஆன்மபலம், பார்வைத்திறன் குறையும்.

மேலும் சூரியன், சனி சேர்க்கையிருந்தால் குழந்தைக்கு தந்தையின் அன்பு கிடைக்காது அல்லது கருத்து வேறுபாடு மிகும்.

ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம் அல்லது அதிபதிகள் வலுப்பெற வேண்டும். அல்லது சுப கிரகப் பார்வை அந்த அமைப்பிற்கு இருக்க வேண்டும். அல்லது திரிகோணாதிபதிகளில் (5, 9) ஒருவராவது நன்றாக இருக்கவேண்டும்.

அல்லது பாதிக்கப்பட்ட திரிகோணாதிபதிகளின் தசை நடைமுறையில் இல்லாதிருப்பது நலம். தசாபுக்திரீதியில் லக்ன அவயோக தசைகள் தொடர்ச்சியாக நடைமுறையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப் பிடித்து சிசேரியனுக்கு நேரம் குறிப்பது நடைமுறையில் சாத்தியப்படாது. அனைத்து முக்கிய அமைப்புகளும் பாதிக்காதவாறு ஓரளவேனும் அனுசரித்துக் குறிப்பது நல்லது.

நாம் எப்படி நேரம் பார்த்தாலும் குழந்தை பூமியில் பிறக்க இறைவன் அனுமதித்த நேரத்தில் மட்டுமே உயிர் ஜனனமாகும். என் அனுபவத்தில் பெண்களின் பிறப்பு ஜாதகக்திலுள்ள செவ்வாய்க்கு கோட்சார சந்திரன் தொடர்புகொள்ளும் காலத்தில் அல்லது பெண்களின் ஜனனகால செவ்வாய்க்கு லக்ன புள்ளி சம்பந்தம் பெறும் காலத்தில்தான் பெரும்பான்மையாக குழந்தை பிறக்கிறது. இது பிரபஞ்ச நியதி. இதை யாராலும் மறுக்கவும் மாற்றியமைக்கவும் முடியாது.

அதேபோல் பல பெண்கள் சுகப் பிரசவம் ஏற்பட வாய்ப்பிருந்தும், வலியில்லாமல் எளிதாகக் குழந்தையைப் பெற்றுக்கொண்டு விடலாம் என்பதால் அவர்கள் அறுவை சிகிச்சைமூலம் குழந்தையைப் பெற்றுக்கொள்கின்ற னர். விதி அறுவை சிகிச்சை வாய்ப்பை நிர்ணயித்தால் மட்டுமே இதுவும் சாத்தியமாகும். ஆக, ஜோதிடரை அணுகி குழந்தை பிறக்க நல்ல நேரம் மற்றும் எந்த நாளில் பிறந்தால் அதிர்ஷ்டம் என பல விஷயங்களைக் கேட்டு, அதன்படி குழந்தையை அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியே எடுக்க முயன்றாலும், விதி ஒத்துழைத்தால் மட்டுமே அது சித்திக்கும். அதனால்தான் நமது முன்னோர்கள் மகப்பேறும் மழைப்பேறும் மகேசன் செயல் என்று சொல்லி வைத்தார்கள்.

செல்: 98652 20406