ஒரு தம்பதியினர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்ளை அமரவைத்து, "என்ன காரியமாக பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.
ஐயா, "எங்களுக்கு ஒரு மகள், மகன் உண்டு, எனது மகளுக்கு 33 வயது. அவளுக்குத் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது. நிறைய ஜோதிடர்களைப் பார்த்தோம்.
அவர்கள் பல பரிகாரங்களைக் கூறினார்கள்.
அனைத்தையும் செய்தோம். எங்கள் ஊரிலுள்ள மலைக்கோவிலில் சித்திரை மாதம் சிவனுக்கு நடக்கும் தேர்திருவிழாவிற்கு "உக்ராண பூஜை'க்கு ஆகும் செலவை ஏற்று செய்தால் திருமணம் நடக்கும் என்று அந்தக் கோவில் குருக்கள் கூறினார். கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோறும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து அந்த பரிகாரத்தையும் செய்து வருகின்றோம். ஆனால் மகள் திருமணம் மட்டும் கூடி வரவில்லை. மேலும் அவளுக்கு ஏதாவது ஒரு நோய் வந்து சிரமம் தருகின்றது. மருத்துவச் செலவையும் அதிகமாக செய்கிறோம். அவள் உடல் நலிவு நீங்கி, திருமணம் நடைபெற அகத்தியரிடம் வழி கேட்டு வந்தோம் என்றார்கள்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.
இவள் கணவனின் வம்சமுன்னோர்கள் காலத்தில் ஐந்து தலைமுறைக்கு முன்பு பிறந்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்விட்ட சாபம் ஐந்து தலைமுறையாக தொடர்ந்து இந்த குடும்பத்தில் வாழ வந்த பெண்களை யும், பிறக்கும் பெண்களையும் பாதித்து வருகிறது. இவள் கணவனின் வம்ச முன்னோர் கள் பணம், சொத்து என வசதியாக வாழ்ந்தவர்கள். ஐந்து தலைமுறைக்குமுன்பு இவன் பாட்டன்களில் ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லை ஒரேயொரு பெண் மகள் தான். அந்த பாட்டனும், மனைவியும் இறந்து விட்டார்கள். அந்தப் பெண் அவன் சகோதரர் கள் பாதுகாப்பில் வாழ்ந்தாள்.
அந்த குடும்பத்தினர் தாய், தந்தையில் லாத அந்தப் பெண்ணை ஒரு வேலைக்காரி யைப்போல் தான் நடத்தினார்கள். அந்தப் பெண்ணிற்கு திருமண வயது வந்தும், 30 வயதாகியும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க யாரும் பொறுப்பேற்றுக்கொள்ள வில்லை. மேலும் இறந்துபோன அவள் தந்தைக் குத் தர வேண்டிய குடும்ப சொத்தினையும் பங்கு தராமல் பங்காளிகளே பங்கு போட்டுக் கொண்டார்கள். தாய்- தந்தை இல்லாத அந்தப் பெண் தந்தையின் உடன்பிறந்தவர்களின் செயலால் சொத்தையும், சுகத்தையும் இழந்தாள்.
அந்தப் பெண் தன் வாழ்வின் நிலையை யும், குடும்பத்தினரின் துரோகத்தையும் நினைத்து சாவதற்குத் துணிந்து அந்த வீட்டி லேயே அரளி விதையை அரைத்து, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனாள். இறப்பதற்கு முன்பு அவள் மனம் நொந்து என் பங்காளிகள் என் வாழ்வையும், சுகத்தையும் தடுத்தார்கள், சொத்தையும் பறித்துக்கொண்டார்கள். நான் பட்ட கஷ்டம் இழப்புகளை இனி என்னைப்போல் இந்தக் குடும்பத்தில் பிறக் கும் பெண்களும் இந்தக் குடும்பத்திற்கு திருமணம் செய்து வாழவரும் பெண்களும் சிரமம், கஷ்டங்களை அனுபவிக்கவேண்டும் என்று சாபமிட்டு இறந்தாள்.
அந்தப் பெண்விட்ட சாபம், ஐந்து தலைமுறையாக இவர்கள் வம்சத்தில் பிறக் கும் பெண்களுக்கு திருமணத்தடை, வேறு ஜாதியில் திருமணம் செய்துகொள்வது, வீட்டைவிட்டு வெளியேறி தங்கள் விருப்பப் படி திருமணம் செய்துகொண்டு ஓடிப் போவது, ஆண்கள் வாழவந்த தங்கள் மனைவியை வெறுத்து வேறு பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது, மனைவியை வெறுப்பது என பெண்கள் அனைவரும் சிரமங் கள், பாதிப்புகள் அடைந்து வாழ்வது போன்ற நிகழ்வுகள் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் தடையாகின்றது என்று கூறுகிறார்கள். இந்த தம்பதியர் செய்த, செய்யும் பாவமும்கூட மகள் திருமணத்தை தடுக்கின்றது.
இவன் தந்தைக்கு இவன் ஒருவன்தான் மகன். நான்கு பேர் பெண்கள், இவன் சகோதரி கள் நான்கு பேரின் வாழ்விலும் இந்தப் பெண்ணின் சாபம் பாதிப்பை தருகின்றது. ஒரு சகோதரி பகையாகி உறவு அற்றுப் போனாள். ஒரு சகோதரிக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போனது. ஒரு சகோதரி யின் கணவனுக்கு ஆண்மைக்குறைவு, அதனால் கணவன்மூலம் குழந்தை பாக்கியம் கிடைக் காமல், அவள் வேறு ஆண்களுடன் உறவு கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாள். ஒரு சகோதரி திருமணமாகாமல் தனிமையாக வாழ்ந்து வருகின்றாள். கணவன்- மனைவி இருவருக்குமே உறவு நிலை சரியில்லை இவன் இவளை விடுத்து வேறு பெண்களிடம் பழகி வருகின்றான்.
இவனும், மனைவியும் பூர்வீக குடும்ப சொத்துகளை தன் சகோதரிகளுக்குத் தராமல் அனைத்தையும் தன் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் வெளியில் சொல்லாமல், மனதின் உள்ளே வைத்து, வேதனையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவளும் தன் பிறந்தவீட்டு உறவுகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்கின்றாள்.
கணவனின் சகோதரிகளுக்கு எதுவும் செய்வதில்லை. அவர்களை மனதில் வெறுத்து, வெளியில் பாசம் உள்ளவள்போல் நடித்துக்கொண்டு இருக்கிறாள் எனப் பட்டியலிட்ட அகத்தியர், நான்கூறிய அனைத் தும் உண்மையா? என கேள் என்றார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு இந்த பெண்சாபமும், பங்காளிகள் சாபமும் நிவர்த்தியாக வழியும், என் மகள், மகன் உட்பட இனிவம்சத்தில் பிறக்கும் வாரிசுகளுக்கு பாதிப்பு வராமலும் அவர்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையவும் அகத்தியர் தான் வழிகாட்ட வேண்டும் என்றார்கள்.
முன்னோர்களால் பாதிக்கப்பட்ட பெண் ணின் ஆத்மாவின் கோபமும், பகையும் இன்னும் தீரவில்லை. அந்த சாபத்தை நிகர்த்தி செய்ய கோவிலில் வருடாவருடம் லட்சக் கணக்கில் செலவு செய்வதாக கூறினார்கள். அதனால் இதுவரை பலன் கிடைக்கவில்லை. இனியும் கிடைக்காது இவனின் சகோதரிகளில் ஒருத்தி திருமணம் ஆகாமல் இருக்கிறாள். கணவன் மனைவி இருவரும், அவளுக்குத் தரவேண்டிய சொத்துகளை தராமலும், வேலைக்காரி போல் நடத்தியும் வருகின்றார்கள். அவ்வப் போது வீட்டை விட்டு விரட்டியும் விடுகின் றார்கள். கணவன், மனைவி இருவரும் தனக்கு செய்யும் துரோகத்தையும், பாவத்தையும் நினைத்து மனம் வெந்து, நிம்மதியில்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றாள். எப்போதெல்லாம் அவளை வீட்டைவிட்டு தூத்தி விடுகின்றார்களோ, அந்தக் காலங்களி லெல்லாம் இவர்கள் சிரமத்தை அனுபவிக்கின் றார்கள் அனுபவிப்பார்கள்.
முன்னோர்கள் காலத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டது போல, இவர்கள் வாழ்விலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக் கின்றாள். அவளை ஆயுள்வரை இவர்களுடன் வைத்து அவள் மனம் சந்தோஷம் அடையும் படி செய்து காப்பாற்றினால், வம்சத்தில் இருக்கும் பெண்சாபம் நிவர்த்தியாகும்.
இந்தப் பெண் சாபம் ஏழுதலைமுறைக் கும் வம்ச வாரிசுகளைப் பாதிக்கும். ஏற்கனவே ஐந்து தலைமுறைகள் பாதித்துவிட்டது. உடன்பிறந்த சகோதரியைக் காப்பாற்றா விட்டால், இவள் விட்டசாபமும் சேர்ந்து இன்னும் இரண்டு தலைமுறைக்கு இவர்கள் வாரிசுகளை வலிமையுடன் தாக்கும்.
தெய்வங்களுக்குச் செய்யும் செலவை உடன்பிறந்த சகோதரிக்கும் செய்யச்சொல் என்று கூறிவிட்டு, ஓலையில் இருந்து மறைந் தார்.
அகத்தியர் கூறியபடியே வீட்டிற்கு அழைத்து வந்து பெண்விட்ட சாபத்தை நிவர்த்தி செய்கின்றோம் என்று கூறிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற்று சென்றார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் விட்ட சாபத்தை, சாபம் விட்டவர்களால் மட்டுமே நிவர்த்தி செய்யமுடியும் கடவுள், பூஜை, பரிகாரங் களால் நிவர்த்தி செய்ய முடியாது என்பதை நானும் புரிந்து கொண்டேன்.
செல்: 99441 13267