இந்த 2025-ஆம் வருடம் முக்கியமான கிரகங்களின் பெயர்ச்சியை கொண்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி, திருக்கணிதப்படி, 2025 மார்ச் 29 அன்று நடந்துள்ளது.
ராகு- கேது பெயர்ச்சி, ஏப்ரல் 26 அன்று நடந்தது.
குருப்பெயர்ச்சி மே 11 அன்று நடந்தது.
சனி மீன ராசிக்கு மாறி அமர்ந்துள்ளார். ராகு- கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் அமர்வர். குரு மிதுன ராசிக்கு மாறுவார்.
சனி மீன ராசியில் இருந்து, தனது மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியையும், 7-ஆம் பார்வையாக கன்னி ராசியையும், 10-ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார்.
ராகு- கேதுக்கள் ஏழாம் பார்வையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வர்.
குரு தனது 5-ஆம் பார்வையாக துலா ராசியையும், 7-ஆம் பார்வையாக தனுசு ராசியையும், 9-ஆம் பார்வையால் மீன ராசியையும் அவதானிப்பார்.
2025 மே 14 முதல் (திருக்கணிதப்படி) 2026 ஜூன் 1 வரை, குருபகவான் மிதுன ராசியில் அமர்ந்து, தனது ஏழாம் பார்வையால் தனுசு ராசியையும், 9-ஆம் பார்வையால் ராகுவையும் நோக்குகிறார்.
எனவே இந்த ஒரு வருடம் காலம், ராகு எனும் பாம்புக் கிரகம், சுபரான குருவின் பார்வையில், அடங்கி அமைதியாக இருப்பார். பின் ஆறு மாதகாலம், குரு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தபின், தன்னிச்சையாக குத்தாட்டம் குதியாட்டம் போடுவார்.
அதுபோல் குரு தனுசு ராசியை பார்க்கும்போது சனியும் அதே தனுசு ராசியை நோக்குகிறார். எனவே ஒரு வருடகாலம் குரு ஜாதகர்களை வெகு சுறுசுறுப்பாக, சனி ரொம்ப மந்தமாக்கிவிடுவார்.
எனவே ஒரு வருடகாலத்திற்கு, குரு பார்வைக்குள் வரும் தனுசு, கும்ப ராசிகளையும், அதில் அமர்ந்துள்ள ராகு மற்றும் அந்த ஸ்தான அதிபதிகளையும் முழு பார்வையால் கட்டுபடுத்தி, ஒரு ஒழுங்கு கட்டுக்குள் ஜாதகரை வைத்துவிடுவார். காலபுருஷ தத்துவப்படி 11-ஆமிட ராகுவை பார்ப்பதால், அரசிய-ல் ரொம்ப கெடுதல் இருக்காது. அரசியல் அதிரி புதிரிக்கும் -மிட்டாகவே இருக்கும். 9-ஆமிடத்தைப் பார்ப்பதால் தர்மம், நீதிமன்றம், உயர் கல்வி இவையும் சீர் தன்மை அடையும். 12 ராசியினரும் அடையப் போகும் பலன்.
மேஷம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
மேஷ ராசியின் 12-ல் சனி, 3-ல் குரு, 11-ல் ராகு, 5-ல் கேது என கோட்சார பெரிய கிரக நகர்வு உள்ளது.
பார்வைகள்: சனி, மேஷ ராசியின் 2, 6, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார்.
குரு 7, 9, 11-ஆமிடங்களை கூடவே 11-ல் அமர்ந்துள்ள ராகுவையும் அளக்கிறார்.
ஆக, இந்த பார்வைகள்மூலம் குருபகவான் ராகுவை தனது கட்டுக்குள் வைத்திருப்பார்.
சனியும், குருவும் ஒருசேர, 9-ஆமிடத்தை நோக்குகின்றனர்.
இதன்மூலம் மேஷ ராசியார் செய்ய வேண்டியது.
குரு ராகுவை பார்ப்பதால், உங்கள் அரசியல் பங்கெடுப்பு லாபமாக அமையும். எனவே மேஷ ராசியினரில், யாருக்கெல்லாம் அரசியல் ஆசை உள்ளதோ, இப்போது கால் பதித்து முயற்சிக்கவும். மற்றும் உங்கள் பகுதியின் தலைவராகவும் ஈடுபடலாம். ஆனால் ஒரே கண்டிஷன்தான். உங்கள் முயற்சியில் நேர்மை இருக்கவேண்டும்.
அப்போதுதான் குரு உங்களை ஆசீர்வதிப்பார்.
11-ல் அமர்ந்த ராகு, எதிர்மறை ஆசைகளை, எண்ணங்களை தூண்டிவிட்டாலும், நீங்களை குருவின் அருளால் அதனை புறந்தள்ளி, உண்மையாக உழைத்தால் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். இதுபோல் சமையல் துறை, தெய்வ வழிபாடு சம்பந்த தொழில், பூர்வீக சொத்து சேர்க்கை, நகை செய்து கொடுப்பது, மந்திரி பதவி, உங்கள் லட்சியத்தை நிறைவு செய்வது, ஓவியம் சார்ந்த தொழில், இவை சார்ந்த ஈடுபாடு நல்ல செய்தி லாபம் தரும்.
சனியும், குருவும், மேஷ ராசியின் 9-ஆமிடத்தை "அட் அடைம்' பார்க்கிறார்கள்.
இது தர்மத்துக்குரிய இடம். எனவே மேஷ ராசியார் ஏதாவது கொடுக்க நினைத்தால் உடனே கொடுத்துவிடுங்கள். அஞ்சு நிமிஷம் யோசித்தால், சனிபகவான் தர்மம் செய்வதை தடுத்து விடுவார். கோவில் வழிபாடு, உழவாரப் பணிகளுக்கு, குரு ஆர்வம் கொடுக்க, சனியோ, "இப்போ ரொம்ப அவசியம் வேறு வேலையை பாரு' என்பார். குரு உங்களுக்கு நிறைய நம்பிக்கைகளை வாரி வழங்க, சனியோ ஓவர் நம்பிக்கை உடம்பைக் கெடுக்கும் என்பார். வெளிநாட்டு பல்கலைக்கழகம் போய் படிக்கலாம் என குரு ஆசை தர, சனிபகவான் அமெரிக்க அதிபர் ட்ரம்பை, வெடுக்கென கிள்ளிவிட்டு, நோ சொல்ல வைத்துவிடுவார். வழக்கறிஞர்கள் தங்கள் தொழி-ல் முன்னேற, சனி முதல்ல வாய்தா வாங்கு என்று கூறிவிடுவார்.
தினப்படி வாழ்வில், மனசாட்சியுடன் வாழ குரு வழிகாட்ட சனிபகவான், வழியின் லைட்டை அனைத்து, இருட்டாக்கி விடுவார். மேஷ ராசியினர் நான் நல்லவனா-
கெட்டவனா என முழியாய் முழிப்பர்.
இந்த மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை, ராகுபகவான் குருபார்வையை பெறுவார்.
அதற்குள் உங்கள் வாரிசுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென்றால் முடித்துவிடுங்கள். வில்லங்கம் இல்லாத மருமகன், மருமகள் வருவர்.
மேஷ ராசியினர் பழனி முருகனை மனமார வணங்கவும், சனி, மேஷ ராசியாரின் 6-ஆமிடத்தைப் பார்த்து, வேலை கொடுத்தாலும், சம்பளம் ஒழுங்காக வராது. பழனி முருகன் வருமானத்தை சீராக்கித் தருவார்.
ரிஷபம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
ரிஷப ராசியின் 2-ஆமிடத்தில் குரு 11-ல் சனி, 10-ல் ராகு, 4-ல் கேது அமர்வு. சனி ரிஷப ராசியை, 5-ஆமிடத்தை, 8-ஆமிடத்தைப் பார்க்கிறார்.
குரு: 6-ஆமிடம், 8-ஆமிடம், 10-ல் உள்ள ராகு இவர்களை பார்க்கிறார்.
குருபகவான் 10-ஆமிட ராகுவை பார்ப்பதால், உங்கள் தொழிலை வெளிநாட்டு எல்லைக்குள் கொண்டுசெல்வார். எந்த வணிகர்கள், தொழில் முனைவோர் என ரிஷப ராசியினர் ஆசைப்படுகிறீர்களோ, அவர்கள் இந்த ஒரு வருடத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். ராகு எதிர்மறை சிந்தனையை தூண்டினாலும், குரு அதனை மறுத்து, நேர்வழி வணிகத்தை ஊக்குவிப்பார். மேலும் எந்த ரிஷப ராசியார், தொழில் பற்றிய மறு மதிப்பீடு செய்வோர் அதனை உயர்த்தும் நிலைக்கு, மாற்று யோசனைகளுடன் அணுகுங்கள். யோசனை மாற்று வழியாக இருப்பினும், வழி நேர்மையாக இருக்கவேண்டும். மற்றும் யாரெல்லாம் மாமியார்கூட பேசாமல் இருக்கிறீர்களோ, அவர்கள் அன்பான விதத்தில், மாமியாரை சமதானப்படுத்துங்கள். ஏனெனில் அதன்மூலம் மிகப்பெரிய கௌரவமும், லாபமும், அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
சனியும், குருவும், ரிஷப ராசியின் 8-ஆமிடத்தை ஒரே நேரத்தில் நோக்குகிறார் கள். 8-ஆமிடம் என்பது அவமானத்துக் குரிய இடம். இதனை சனி பார்த்து சுருக்க, குரு பார்த்து பெருக்குவார்.
அப்படின்னா என்ன ஆகும். ஒண்ணும் ஆகாது. ஆமாம், 8-ஆமிட தீய நிகழ்வுகள், செயல்படாமல் போய்விடும்; யோசியுங்கள். ஒரு மனிதனை, ஒருத்தர் எந்திரிச்சு ஓடுடா என கத்த, இன்னொருத்தர் மவனே எந்திரிச்ச, கொன்னே போட்டுவேன் என மிரட்ட, அந்த மனிதன் பயந்து, நான் ஒண்ணுமே பண்ணலை ஆளைவுடுங்க என சுருண்டுவிட மாட்டானா. அப்படித்தான் ரிஷப ராசியின் 8-ஆமிடம் இருக்கும்.
இதில் ஒரு நன்மையும் கிடையாதா என் றால், ஆயுள் விருத்தி கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் சீராக அமையும். சிறைக்கு போவது, தாமதப்படுத்தப்படும், பெண்களின் மாங்கல்யம் ப-க்கும். மகாலட்சுமி தாயாரை மடியில் அமர்த்தியுள்ள பெருமாளை வணங்கவும்.
மிதுனம்
2025 மே 14 முதல் 2026 ஜூன் 1 வரை
மிதுன ராசியின் 10-ஆமிடத்தில் சனி, ராசியில் குரு, 9-ல் ராகு, 3-ல் கேது அமர்வு.
9-ஆமிட ராகுவை, குரு தனது 9-ஆம் பார்வையால் பார்க்கிறார். 9-ஆமிடம் என்பது தர்ம ஸ்தானம். முக்கியமாக குருக்களை குறிப்பது. இதனால் யாகம், வேள்வி செய்யும் அந்தணர்களின் ஆசையை பேராசையாக, ராகு தூண்டச் செய்தார். இந்த ராகுவை பார்க்கும் குரு, அதனை அடக்குவார். வெளிநாட்டு கல்விக்கு, கள்ளத்தோணி ஏறிச் செல்லலாம் எனும் வௌங்காத யோசனையை, ராகு கொடுக்க, குரு அதனை ஒரு அறை கொடுத்து அடக்கி, நேர்வழியில் முயற்சிக்க வ-யுறுத்துவார். பரம்பரைச் சொத்தை முழுவதும் நீங்களே ஆட்டையை போடலாம் என ராகு பரபரக்கச் செய்ய, குரு அந்த சிந்தனையை நிராகரிப்பார். சட்டத்துறையில் சந்து பொந்துமூலம் வெளியேவர ராகு துடிக்க, குரு நேர்மையான வழியை கை காட்டுவார். புதியது கண்டுபிடிக்கிறேன் என ராகு, காற்றி-ருந்து பெட்ரோல் தயாரிக்கிறேன் என நூல்விட, குரு அதனை உடனடியாக அறுத்துவிடுவார். இந்த வருடத்தில், நல்ல விஷயங்களைக்கூட, எதிர்மறையில் செயலாற்ற ராகு விரும்ப, குரு நேர்மறை வழிக்கு மட்டுமே எஸ் சொல்வார். இதனை மனதில் வைத்து எதிர்மறை செயல்களுக்குத் தடை போடுங்கள்.
சனி மிதுன ராசியின் 7-ஆமிடத்தை தனது 10-ஆம் பார்வையால் பார்க்க, குரு அதே 7-ஆமிடத்தை தனது ஏழாம் பார்வையால் அளக்கிறார். சனிபகவான் கல்யாணத்தை தாமதப்படுத்த, குரு வயசாகிறதே, இப்போதே பண்ணிவிடலாம் என்பார். இதனால் மிதுன ராசியார், இந்த வருடம் நடக்கும் கல்யாணத்தை, கோவி-ல் வைத்து, சிம்பிளாக செய்யுங்கள். சனி இவ்வித திருமணத்தை மட்டுமே விரும்பி நடத்த அனுமதிப்பார்.
ரொம்ப புத்திசா-யான, சுத்தபத்தமான, தீர்க்கமான வியாபார பங்குதாரரை குரு பரிந்துரைக்க, சனி வெகுண்டு எழுந்து, ஆணியே புடுங்க வேண்டாம் என நிறுத்திவிடுவார். அழுக்கான, சொங்கி பங்குதாரர் சேர்ந்தால் மட்டுமே சரி ஒத்துக்கிறேன் என்பார். இதேபோல் உங்கள் வழக்குகளுக்கு வாதாட, வழக்கறிஞர் விஷயத்திலும் நடக்கும். இதேபோல் குரு 5, 7-ஆம் வீடுகளை ஒரு சேர பார்ப்பதால், சில மிதுன ராசியாருக்கு காதல் திருமணம் கூடிவர வாய்ப்புள்ளது. ஆனால் இதனை பார்க்கும் சனிபகவான் என்னது லவ் மேரேஜா எனக்கு புடிக்காது என கத்தரிக்கோலை போட்டு கத்தரித்து விடுவார். குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் நிறைய கல்யாணம், நிறைய வியாபார கிளைகள், நிறைய நெய் இனிப்பு பலகாரம் சாப்பிட வாய்ப்பு என இவை பெருகும் வாய்ப்பு கதவைத் தட்ட, சனியோ, "லாக் த டோர்' என கடுமை காட்டுவார்.
எனவே இந்த கால கட்டத்தில் வரும் வாய்ப்புக்களை, ஆர்ப்பாட்டம் இல்லாமல், சிக்கனமாக செயல்படுத்துங்கள். அழகாக கைகூடிவரும்.
மிதுன ராசியார், குருவாயூரப்பனை வணங்குங்கள். நல்ல வாய்ப்புகள் இனிதாக நிறைவேறும்.
அடுத்தடுத்த ராசிகள் வரும் இதழில்...