முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: மிருகசீரிடம்- 4.
செவ்வாய்: மகம்- 3.
புதன்: புனர்பூசம்- 3.
குரு: திருவாதிரை- 1.
சுக்கிரன்: பரணி- 3.
சனி: உத்திரட்டாதி- 2.
ராகு : பூரட்டாதி- 3.
கேது: உத்திரம்- 1.
கிரக மாற்றம்:
22-6-2025 கடக புதன் இரவு 9.28 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்: மேஷம்
22-6-2025 இரவு 11.03 மணிக்கு ரிஷபம்.
24-6-2025 இரவு 11.45 மணிக்கு மிதுனம்.
27-6-2025 அதிகாலை 1.40 மணிக்கு கடகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மேஷம் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்படுவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. செவ்வாய், கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உங்களுக்கு இருக்கும். தேவையற்ற பயணங் களைத் தள்ளிவைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். பெண்கள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற முருக வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 25, 26.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது சற்று நிதானத்தோடு இருப்பது நன்மை தரும். தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளா தார உதவிகள் கிடைக்கும். சட்ட ரீதியாக இருக்கக்கூடிய சிக்கல்கள் எல்லாம் தற்போது முழுமையாக விலகி நிம்மதி யுடன் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர் களின் பாராட்டுதலை பெறக் கூடிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பதுமூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 27, 28.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய்- கேது, லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்ற காரணத்தால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கலாம். குறிப்பாக தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிநிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நேரமாகும். ஒருசிலருக்கு மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்களுக்கு படிப்பில் சிறந்து விளங்கினாலும் ஞாபகமறதி ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதன் மூலமாகவும், சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது மூலமாகவும் வளமான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 25, 26.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது மிகமிக நல்லது. வண்டி, வாகனங் களில் செல்கின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடி இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியை இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சிந்தித்துப் பேசுவது மிகவும் நல்லது. மாணவ- மாணவியர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24, 27, 28.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத் தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகமானது உங்களுக்கு இருக்கிறது. நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வரும் நாட்களில் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வதன் மூலமாக வளமான பலன்களைப் பெறலாம்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய்- கேது 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் வந்தடைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தாமதமாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. கால நேரம் பார்க்காமல் உங்களுக்கு ஒதுக்கிய பணியில் நீங்கள் கவனத்தோடு இருந்தால் அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். மாணவ- மாணவியர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதும், 10-ல் புதன், 11-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதால் நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய தேவையற்ற மனஸ்தாபங்கள் எல்லாம் தற்போது விலகும். திருமண வயதடைந்த ஆண்- பெண்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் லாபகரமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள்மூலமாக ஒருசில வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும் ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற அம்மன் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 27, 28.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்தி லும் சிந்தித்துச் செயல்படவேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் தொடர் பான கணக்குகளை சரியான முறையில் பராமரிப்பது மிகமிக நல்லது. முக்கிய விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் ஒருவருக்கொருவர் கௌரவம் பார்க்காமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு மற்றவருடைய பணியும் இணைத்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை நிலவும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் கவனமாக இருந்தாலும் உடனிருக்கக்கூடிய நபர்கள் உங்களை வேற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற அஷ்ட லட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங் களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 23, 24.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ராசியாதிபதி குரு 7-ல் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிள்ளைகள்வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர்கள் மூலமாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. மாணவ- மாணவியர்கள் எதையும் எளிதில் புரிந்துகொண்டு படிப்பில் சிறப்பாக செயல்படமுடியும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சனி 3-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், 7-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் குறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவரிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது, வண்டி, வாகனங்களில் செல்கின்ற பொழுது நிதானத் தோடு செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைக்கும். ஒருசிலருக்கு நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த சின்ன சின்ன பிரச்சினைகள் எல்லாம்கூட தற்போது விலகி மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறந்து விளங்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27, 28.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து எந்தவித நெருக்கடியும் சமாளிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்களுடைய ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் சில ஆதாயத்தை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்லலாம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசில விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். நேரத்திற்கு சாப்பிடுவது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். காலபைரவரை வழிபாடு செய்வது, விநாயகர் வழிபாடு செய்வதன்மூலமாக ஏற்றங்களை அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 22, 27, 28.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்பதால் எதையும் எதிர்கொண்டு ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். புதன் இவ்வாரத்தில் 4, 5 ஆகிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையமுடியும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வரும் நாட்களில் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். ஒருசில விஷயங்களில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருக்கவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.