Skip to main content

சந்தானத்திற்கு இப்போதான் புரிஞ்சிருக்கு... -   A1 விமர்சனம்

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

லோக்கல் பையன் சந்தானத்திற்கும், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த மாடர்ன் பெண் தாரா அலிஷாவிற்கும் கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதை வழக்கம்போல் நாயகியின் அப்பா (வசூல்ராஜா புகழ் சப்ஜக்ட்) யட்டின் கார்யேகர் ஜாதி மதத்தை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கடுப்பான சந்தானம் அன் பிரண்ட்ஸ் அவரை 'போட்டுத் தள்ளி'விடுகின்றனர். இதையடுத்து சந்தானம் எப்படி இந்த கொலையிலிருந்து தப்பித்து காதலி கரம் பிடித்தார் என்பதே A 1 படத்தின் கதை.

 

santhanam



அரதப்பழசான கதையை சென்னையின் லோக்கல் நேட்டிவிட்டியுடன் கலந்து, ஆங்காங்கே ஏற்ற இறக்கங்களோடு கலகலப்பாக நகர்கிறது A 1 படம். சந்தானத்தின் வழக்கமான ஒன் லைன் பன்ச் காமெடிகள், அதற்கு ஈடுகொடுத்து கவுண்டர் கொடுக்கும் லொள்ளு சபா நண்பர்கள் மூலம் ரசிக்கவைக்கும் இப்படம் கதைத்தேர்வு, லாஜிக் மீறல்கள் போன்ற விஷயங்களில் சற்று அயர்ச்சி ஏற்படுத்தினாலும் படத்தின் கலகலப்பான காட்சிகள், கிரிஸ்பான நீளம் ஆகியவை அதை சரி செய்துவிடுகின்றன. குறிப்பாக சென்னைக்கே உரித்தான லோக்கல் ஸ்லாங்கில் இருக்கும் வசனங்கள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளன. இயக்குனர் ஜான்சன் சந்தானத்தின் பலம் அறிந்து கதையை தேர்வு செய்துள்ளது படத்திற்கு இன்னொரு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.

 

 

a1 heroine



சந்தானம் தன் வழக்கமான நடிப்பையே இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த முறை இடையில் போட்ட அதிரடி ஹீரோ வேஷத்தை களைந்துவிட்டு வந்திருக்கிறார். தனக்கான சக்ஸஸ் ரூட் இதுதான் என்பதை உணர்ந்தது போல இருக்கிறது படத்தில் அவரது பெர்ஃபார்மன்ஸ். அவர் அடிக்கும் ஒன் லைன் பன்ச் காமெடிகள் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கின்றன. இருந்தும் சந்தானத்தை காட்டிலும் அவரின் நண்பர்களாக வரும் லொள்ளு சபா நடிகர்கள் நன்றாக கிச்சிக்கிச்சி மூட்டியுள்ளனர். இவர்கள் கூடவே மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். நாயகி தாரா அலிஷா சம்பிரதாய நாயகியாக வலம் வந்துள்ளார். ஸ்ட்ரிக்ட் போலீசாக வரும் சாய்குமார் சிறிது நேரம் வந்து மிரட்டிவிட்டு செல்கிறார்.

 

 

a1 comedy



சந்தோஷ் நாராயணன் இசையில் 'மாலை நேர மல்லிப்பூ' பாடல் மட்டும் கேட்கும் ரகம். எடிட்டர் லியோ ஜான் பால் கத்திரியை நன்றாகப்  பயன்படுத்தி படத்தை காப்பாற்றியுள்ளார். கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் வெறும் காமெடியை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார் இயக்குனர் ஜான்சன். ஒரு முழுநீள படத்தில் தீவிரமான எந்த உணர்வுமே இல்லாமல் வெறும் காமெடி மட்டும் போதுமா? சீரியஸான, முக்கியமான ஓரிரு காட்சிகளுக்குள்ளும் காமெடியை சேர்த்திருக்கிறார்கள்.

A1 - எதுவும் வேண்டாம், இருபது முறை சிரித்தால் போதும் என்றால் பார்க்கலாம். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Maajja Company Explains Santhosh Narayanan's Allegation regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்திய மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. 

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில், கடந்த 5 ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது” எனப் பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியது. 

இதையடுத்து மற்றொரு பதிவில், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர். ரஹ்மான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சந்தோஷ் நாராயனன் குற்றச்சாட்டிற்கு மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நோயல் கீர்த்திராஜ் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை மறுத்து மாஜா நிறுவனத்தின் பதில் அறிக்கை. சுயாதீன இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே மாஜா நிறுவனம். எங்களின் முதல் வெளியீடான என்ஜாய் என்ஜாமியின் வெற்றி எமக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதையடுத்து, இந்த சாதனையைப் படைத்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இந்தப் பாடலின் வெற்றிக்குப் பின்னால் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே இருந்த சில முரண்பாடான கருத்துக்களால் இந்த வெற்றி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். சுயாதீன கலைஞர்களின் படைப்புகள் மற்றும் சுயாதீன இசைக்கான எங்கள் அர்ப்பணிப்புகளில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். மேலும் நாங்கள் எங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் அல்லது கலைஞர்களிடமிருந்து அவர்களுக்கான வருமானங்களை நிறுத்தி வைக்கும் செயல்களை செய்யவில்லை. இருப்பினும், நாங்கள் நம்பியிருந்தது போல் சம்பந்தப்பட்ட கலைஞர்களிடையே பாடலுக்கான பங்களிப்பு பற்றி ஒருமித்த கருத்து இல்லை. அது தவிர, கலைஞர்களின் ஒப்பந்த கடமைகளின்படி, அவர்களின் நேரடி ஈடுபாடுகள் மற்றும் நேரடியாக சேகரிக்கப்பட்ட வருமானம் பற்றி நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தாலும் அதற்கான எந்த வெளிப்பாடுகளோ அல்லது அறிக்கைகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தச் செயற்பாடுகளால் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு காணும் முயற்சிகள் சிக்கல் நிலையிலுள்ளது.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, அவர்கள் சார்பாக கணிசமான செலவுகளையும் மாஜா நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் நிலை நியாயமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுள்ளோம். சமீபத்திய அவதூறான குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு உரிய வழிகளில் அவற்றை நிவர்த்தியும் செய்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“ஏ.ஆர். ரஹ்மானும் பாதிக்கப்பட்டுள்ளார்” - சந்தோஷ் நாராயணன்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
ar rahman also victim in Maajja fiasco said by santhosh narayanan regards enjoy enjaami issue

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தெருக்குரல்’ அறிவு, தீ ஆகியோரின் குரலில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சுயாதீன ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’. இப்பாடலுக்கு ‘தெருக்குரல்’ அறிவு வரிகள் எழுதியிருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் யூட்யூப் சேனலில் இப்பாடலின் வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது வரை யூட்யூபில் 487 மில்லியன் பார்வையாளர்கள கடந்துள்ளது. 

இப்பாடல் தொடர்பாக ‘தெருக்குரல்’ அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் சர்ச்சை இருந்தது. ஒரு பிரபல இதழில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் குறித்து செய்தி வெளியான நிலையில், அதில் அறிவு பெயர் இடம்பெறாதது சர்ச்சையானது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில், ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக இருவரும் மாற்றி மாற்றி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில் சந்தோஷ் நாராயணன் நேற்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இப்பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளதாகத் தெரிவித்து இதுவரை இப்பாடல் மூலம் 1 பைசா கூட வருமானம் வரவில்லை என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்த பாடலுக்கு நீங்க கொடுத்த அன்பிற்கு நன்றி. இந்தப் பாடலின் 100 சதவீத உரிமைகள், வருவாய்கள் மற்றும் ராயல்டிகளை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால் இப்பாடல் மூலம் நான், அறிவு, தீ ஆகிய மூன்று பேரும் இன்று வரை எவ்வளவு வருமானம் பெற்றுள்ளோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது நாள் வரையில் 1 பைசா கூட எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம்.

இந்த அனுபவத்தால் நான் சொந்த ஸ்டுடியோவைத் துவங்கவுள்ளேன். சுயாதீன இசைக் கலைஞர்களுக்கு, தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்கும் வருவாயைப் பெறுவதற்கும் எந்த இடையூறும் இல்லாமல் எதுவாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை. இதைப் பதிவிட காரணம், நான் சுயாதீன இசைக் கலைஞர்களுக்காக இருக்கிறேன். அவர்களின் வருவாயை உறுதி செய்வேன். எனது யூட்யூப் சேனல் வருமானமும் அந்த மியூசிக் லேபிளுக்கே செல்கிறது. இதைப் பொதுத் தளத்தில் சொல்ல விரும்பினேன். ஆனால் சுயாதீன இசைக் கலைஞர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்” என பேசினார். இது இசைத்துறையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் ஒரு பதிவிட்ட சந்தோஷ் நாராயணன், “என் பாசத்துக்குரிய ஏ.ஆர் ரகுமான் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இந்த மாஜா விவகாரத்தில் எப்போதுமே ஆதரவுத் தூணாகவே இருந்துள்ளார். அவரும் இந்த பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிவு, தீ, நான் உட்பட யாரும் எங்களது வருமானத்தை இதுவரை பெறவில்லை. ஈமெயில்களால் ஏமாற்றப்பட்டுள்ளோம். உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்தத் தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். எனது வழிகாட்டியான பா. ரஞ்சித் மற்றும் அறிவுடன் மீண்டும் பணி புரிவேன். அனைத்து இந்தியக் கலைஞர்களுமே விரைவில் அவர்களது நிலுவையைப் பெறுவார்கள்." என குறிப்பிட்டுள்ளார்.