Skip to main content

"இந்த வகையான படம் இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல்முறை" - யுவன் சங்கர் ராஜா பேச்சு!  

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Yuvan Shankar Raja

 

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் இசைவெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது. படக்குழுவினர், திரைத்துறை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ad

 

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், "வெங்கட் பிரபு இந்தக் கதையைச் சொன்னபோது இந்தக் கதையை எப்படி பண்ணுவார் என்று யோசித்தேன். சில காட்சிகள் திரும்பத்திரும்ப வரும். அது ஒரு படமாக எப்படி வரும் என நினைத்தேன். ஆனால், படம் பார்த்த பிறகு எனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. நீங்கள் எப்போதும் பார்க்கும் சிம்பு இந்தப் படத்தில் இருக்கமாட்டார். முற்றிலும் வேறான சிம்புவாக இருப்பார். சிம்பு - எஸ்.ஜே.சூர்யா இடையே நடக்கும் விஷயங்கள்தான் படம். இடையிடையே கல்யாணி ப்ரியதர்ஷன் வருவார். இந்த வகையான படம் இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல்முறை. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் எனக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாருக்கும் இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோட்’ படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்; அறிவித்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
vijay sung a song in goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.ச்விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "அஸ்கு லஸ்கா, கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடலுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் விஜய் பாடியவை. அதே படங்களில் மற்ற பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி விஜய் பாடிய பாடல்களை மட்டும் குறிப்பிட்டிருந்ததால், இந்த படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடுவதாக யூகிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில் விஜய்,  தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் பாடியுள்ளதாக வந்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது. முதல் முறையாக யுவன் இசையில் பாடுகிறார் விஜய் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

“கொடூரமான குற்றம்; தீமைகளை எதிர்கொள்கிறோம்” - யுவன் வேதனை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
yuvan shankar raja about puducherry child girl issue

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி (வயது 9), திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது உடல் அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும், சிறுமியைக் கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்ததையடுத்து அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் அவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதும் தெரிய வந்தது.

சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு ஐ.பி.எஸ். கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழுவே இனிமேல் இந்த வழக்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். புகாரளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குழந்தையை மீட்டு இருக்கலாம் என அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்பு காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தையடுத்து அச்சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், குஷ்பு, சேரன், கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், கருணாஸ்,  ஜெயம் ரவி உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளப் பக்கத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா, “இந்தியாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் என்பது ஒரு தீராத பிரச்சினை. 28.9% குழந்தைகள் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. 

குழந்தைகளுக்கு நல்ல முறையில் தொடுதல், தவறான முறையில் தொடுதல் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம். புதுச்சேரியில் போதைப்பொருள் தொடர்பாக நடந்த இந்த கொடூரமான குற்றம், நாம் பல தீமைகளை எதிர்கொள்கிறோம் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது, பாதுகாப்பான சமுதாயமாக, ஒன்றுபட்ட நாடாக ஒன்றுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by U1 (@itsyuvan)