Skip to main content

நடிகை அஞ்சலி, யோகி பாபு இணைந்து நடிக்கும் புதுப்படம்!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

yogi babu

 

 

ஜெய், அஞ்சலி இருவரையும் வைத்து சினிஷ் இயக்கிய படம் பலூன். 2017ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது இந்த படத்தின் இயக்குனர், பூச்சாண்டி என்னும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

 

தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் சினிஷ் 'பூச்சாண்டி' என்கிற திரைப்படத்தை, சோல்ஜர்ஸ் ஃபேக்டரி என்கிற நிறுவனத்தின் பெயரில் தயாரித்துள்ளார். அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் சினிஷ் பகிர்ந்துள்ளார்.

 

இந்த போஸ்டரில் அஞ்சலி பேயாகவும், அவருக்குப் பின்னால் கையில் ரோஜாவோடு யோகி பாபு பேய் ஓட்டுபவரைப் போலவும் நிற்கிறார். இவர்களுக்கு மேல் பேய்கள் முன்னேற்றக் கழகம் என்கிற பலகை இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரேஷ்மா, 'விஜய் டிவி' ராமர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார். 

Next Story

‘யாவரும் வல்லவரே’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
'Yavarum Vallavare' movie release date announcement

வரவேற்பை பெற்ற ‘வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ போன்ற வெற்றிப்படங்களை  தந்தவர் 11:11 புரொடக்‌ஷன் பிரபு திலக்.  தற்போது  N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ எனும் புதிய படத்தை வழங்கவுள்ளார். இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, அவர்களுடன் தமிழின் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

11:11 புரொடக்‌ஷன் சார்பில் டாக்டர். பிரபு திலக் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, "’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி  திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களுடன் ‘நான் கடவுள்’  ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்” என்றார்.