Skip to main content

சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை அளிக்காத ஜெயலலிதா... மேடையிலேயே சுட்டிக்காட்டிய ரஜினி!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசுவது மிக உயர்ந்த குணம். சிலர் மனதில் ஒன்று நினைப்பார்கள். ஆனால், பேசும்போது அது வேறாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் பெரும்பாலும் போலியான குணம் கொண்ட மனிதர்களாகவே இருப்பார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படையாக பேசக்கூடிய உயர்ந்த குணம் கொண்டவர். ரஜினிகாந்தின் இந்தக் குணத்தை நான் வியந்து பார்த்த ஒரு தருணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். 

 

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் திறப்புவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தவர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இடம்பெற்றன. அவர்கள் விழா மேடையிலும் அமரவைக்கப்பட்டனர். இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் குஞ்சுமோன் உட்பட பலரும் அந்த விழா மேடையில் அமரவைக்கப்பட்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த சிவாஜி கணேசனுக்கு மேடையில் இடம்வழங்கப்படாமல் பார்வையாளர்கள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் இடத்தில் வேறு எந்த நடிகராவது இருந்திருந்தால் விழாவிற்கே வந்திருக்க மாட்டார்கள். ஆனால், சிவாஜி கணேசன் பெருந்தன்மையுடன் வந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். இதை சிவாஜி கணேசனுக்கு நிகழ்ந்த அவமரியாதையாக உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கருதினர். உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசனுக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் இந்தச் செயல் கலை ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

 

இந்தச் சம்பவம் நடந்து சில ஆண்டுகள் கழித்து, சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கும் விழா திருவல்லிக்கேணி சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போதும் ஜெயலலிதாதான் முதலமைச்சர். அந்த விழாவை அவர்தான் தலைமையேற்றும் நடத்தினார். அப்படி ஒரு விழா இந்தியாவில் எந்தவொரு நடிகருக்காகவும் இதற்கு முன் நடந்ததில்லை. இந்தியாவின் அனைத்து மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்களும் அந்த விழாவிற்கு வருகை தந்திருந்தனர். இருபது பேர் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கிவந்து சிவாஜி கணேசன் கழுத்தில் போட்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ‘தவறு செய்வது என்பது மனித இயல்புதான்; தான் செய்த தவறை திருத்திக்கொள்வது அதைவிட பெரிய விஷயம். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி சாருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கொடுக்கப்படவில்லை. நான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து இன்று சிவாஜி சாருக்கு மிகப்பெரிய விழா எடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்’ என்றார். ஜெயலலிதாவும் அதே மேடையில்தான் இருந்தார். ஃபிலிம் சிட்டி திறப்பு விழாவில் சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாதது பற்றி பேசிய முதல் நபர் நடிகர் ரஜினிகாந்த்தான். பலருக்கும் இது தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று எவரும் அது பற்றி பேசவில்லை. ஏன் பத்திரிகைகள்கூட அது தொடர்பாக எதுவும் எழுதவில்லை.

 

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் வந்தது. மனதில் இருந்ததை தைரியமாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது, அவர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.