Skip to main content

கரோனாவால் கதிகலங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம்... ஒத்திவைக்கப்பட்ட படங்கள்!!! 

Published on 06/10/2020 | Edited on 06/10/2020
warner bros

 

 


கரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் உள்ள சினிமாதுறை மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான, லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனம் வார்னர் ப்ரதர்ஸ். இந்த வருடம் பல பிரம்மாண்ட படங்களை வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனாவால் பல படங்களில் ரிலீஸ் தேதி மாற்றி அமைத்து தற்போது இன்னும் கரோனா பிரச்சனை முடிவடையாததால் படங்கள் எதுவும் ரிலீஸாகாமல் உள்ளது.

 

உலகம் முழுவதும் சில நாடுகளில் கரோனா அச்சுறுத்தலையும் மீறி சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான டெனட் படத்தை திரையரங்கங்கள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் ரிலீஸ் செய்தது. இதன்பின் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் திரையரங்கங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்தது. ஆனால், ரிலீஸ் செய்யப்பட்ட நாடுகளிலேயே முதல் வாரத்திற்கு பின் டெனட் படம் சரியாக ஓடவில்லை. இதற்கு காரணம் கரோனா அச்சுறுத்தல் என்பதால், இதன்பின் ரிலீஸுக்கு தயாரக வைத்திருந்த படங்களில் ரிலீஸ் தேதிகளை மீண்டும் ஒத்திவைத்துள்ளது நிறுவனம்.

 

இதுமட்டுமல்லாமல் கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலியான ரீகல் சினிமாஸ், தங்களின் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. பிரிட்டனில் இருக்கும் சினிவேர்ல்ட்தான் ரீகல் சினிமாஸின் தாய் நிறுவனம். சினிவேர்ல்டும் பிரிட்டனில் இருக்கும் தங்களது திரையரங்குகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

 

இதுபோன்ற பல்வேறு காரணங்களை கருத்தில்கொண்டு வார்னர் ப்ரதர்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. டிசம்பர் 2020-ல் வெளியாகவிருந்த 'ட்யூன்' தற்போது அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகும். 'தி பேட்மேன்' அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகவிருந்தது. தற்போது மார்ச் 4, 2022 அன்று வெளியாகும். ஜூன் 3, 2022ல் வெளியாக இருந்த 'தி ஃப்ளாஷ்' நவம்பர் 4, 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'ஷஸாம் 2' நவம்பர் 4, 2022 என்கிற தேதியிலிருந்து ஜூன் 2, 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 22, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'ப்ளாக் ஆடம்' திரைப்படமும் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.