Skip to main content

"இது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும்" - விஷால் வேதனை!

Published on 16/01/2021 | Edited on 16/01/2021
gree

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு மற்றும் பொங்கலன்று வெளியான ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவரின் தாயார் ஜெயலட்சுமி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 62.  தாயார் ஜெயலட்சுமிக்கு நேற்று ஜனவரி 15 காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலை 11 மணியளவில் காலமானார். இவரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

 

"சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் அவர்களது தாயார் ஜெயலட்சுமி அவர்கள் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கும், அவரது சகோதரர் தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது தாயார் ஆன்மா சாந்தி அடையும் வேண்டிக்கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய்யின் விருப்ப வார்த்தை; நன்றியை வெளிப்படுத்திய விஷால்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
vishal thanked vijay for his helping 1 crore to nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முழுவதுமாக கட்டி முடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது நடிகர் சங்கம். அந்த வகையில், வங்கியில் ரூ. 40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த மாதம் நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். 

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதற்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்திருந்த நிலையில் சங்க பொதுச் செயலாளரும் நடிகருமான விஷால் எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி என சொன்னால் அது இரண்டு வார்த்தைகளில் அடங்கிவிடும். ஆனால் இதயத்திலிருந்து ஒரு உதவியை செய்யும் நபருக்கு அது போதாது. அவரது உதவி நிறைய அர்த்தத்தை குறிக்கிறது.

நடிகர் சங்க புதிய கட்டட மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி கொடுத்த, எனக்கு பிடித்த நடிகர் விஜய்யை பற்றி பேசுகிறேன். உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது பணிகளை விரைந்து முடிக்க நீங்கள் எங்களுக்கு வலிமை அளித்துள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் விஜய் எப்போதும் தனது ரசிகர்களை அழைக்கும் வார்த்தையான நண்பா என்ற வார்த்தையை குறிப்பிட்டு, “நன்றி நண்பா” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“அப்படியெல்லாம் கிடையாது” - மும்மத வழிபாடு குறித்து விஷால் விளக்கம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vishal's explanation of Trinitarian worship

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34ஆவது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்தது. தூத்துக்குடியில், குடிநீர் வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாக அப்பகுதி மக்கள் சொன்ன பிறகு, உடனே 2 பெரிய சின்டக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் வசதி செய்து கொடுத்தார் விஷால். இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். 

பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்புகள் திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இதனிடையே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில் படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்ததாக கடந்த ஜனவரியில் விஷால் தெரிவித்திருந்தார். இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘டோன்ட் ஓரி டோன்ட் ஒரிடா மச்சி’ பாடல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் விஷால், ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர், ஈ.பி.எஸ்ஸா இல்லை ஓ.பி.எஸ்ஸா என கேள்வி கேட்டதையடுத்து ஐ.பி.எஸ் என பதிலளித்தார் விஷால். மேலும், “நான் வணங்குற அந்த ஐ.பி.எஸ்-க்கு...” என சொல்லி சல்யூட் அடித்தார். பின்பு, “என் நண்பன் பேரும் ஐபி செந்தில்குமார். அவரது மனைவி மெர்சி எனக்கு தங்கை மாதிரி. அதனால் ஐ.பி.எஸ்” என்றார். 

இதையடுத்து விஷால் சாப்பிடுவதற்கு முன், மும்மத வழிபாடுகள் செய்வது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான கேள்வியை மாணவர்களில் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த விஷால், கழுத்தில் அணிந்திருக்கும் ஏசு மாலை மற்றும் கயில் கட்டியிருந்த கயிரை காண்பித்து “இவர் ஜீசஸ் இவரும் சாமி தான். எல்லாம் சாமிதான். பத்து வருஷமா பண்ணிகிட்டு இருக்கேன். யார் சோறு போட்டாலுமே. எல்லா கடவுளும் ஒன்னு தான். அல்லாவும் ஒன்னு தான். சாய் பாபாவும் ஒன்னு தான். ஜீசசும் ஒன்னு தான். அது விளம்பரத்துக்காக பண்ணுறேன், அரசியல் வரப்போகிறேன் அதுக்காக பன்ணுறேன்... அப்படியெல்லாம் கிடையாது. எல்லா சாமியும் ஒரு சாமி தான். அந்த விஷயம் எனக்கு தப்பா எதுவும் தோணல” என்றார்.