சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் 'ஈ.பி.எஸ்.' யார்? என்ற கேள்வியோடு ஒரு போஸ்டர் பரவி வந்தது. தற்போது அந்த கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. விமல் - சற்குணம் இணையும் படத்திற்கு எங்க பாட்டன் சொத்து என பெயரிடப்பட்டிருக்கிறது. அப்பெயரின் சுருக்கமே 'ஈ.பி.எஸ்'.
'எங்க பாட்டன் சொத்து', நடிகர் விமலோடு சற்குணம் இணையும் நான்காவது படமாகும். ஏற்கனவே விமலை வைத்து 'களவாணி' 1 மற்றும் 2, 'வாகை சூட வா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சற்குணம். இதில் வாகை சூட வா படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அரசன் பிக்சர்ஸ் அழகிரிசாமி தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கதாநாயகியாக, அனிகா விக்ரமன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளன.