Skip to main content

விஜயின் புதிய தலைவலி!

Published on 03/03/2018 | Edited on 05/03/2018

vijay


மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் .ஆர்.முருகதாஸ் விஜயை இயக்குகிறார். .ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் போட்டோ சூட்டின்போது புகைப்படங்கள் வெளியானது. பின்னர் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில் விஜய் சண்டையிடும் காட்சியும் படங்களாகவும், வீடியோவாகவும் வெளியே கசிந்து சமூகவலைத்தளங்களில் வைரலானதால் பட குழுவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் மறுபடியும் இந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படங்களை அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டாக்கி வருவதால் படக்குழுவினர் செய்வதறியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்