Skip to main content

"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில..." - விஜய் சேதுபதி    

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

தமிழ்நாடு முழுவதும் (வேலூர் நீங்கலாக) இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்று ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் தங்கள் பகுதி வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

 

vijay sethupathi

 

vijay sethupathi with kids

 

vijay sethupathi selfie



நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கம் பகுதியில் கார்ப்பரேஷன் காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்து முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் முதல்ல ஓட்டு போடுற அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். இது ப்ரௌட் மொமண்ட். ஏன்னா, பதினெட்டு வயசுல நம்ம வீட்டுல கூட ஒரு முடிவெடுக்க நம்மை கேப்பாங்களானு தெரியாது. ஆனா, நம்ம நாட்டை யார் ஆளுறதுன்னு உங்ககிட்ட கேக்குறாங்க. நானும் ஓட்டு போட்டுட்டேன். எல்லோரையும் போல நானும் காத்துகிட்ருக்கேன், நல்லது நடக்கும்னு" என்று கூறினார்.

 

kanchana 3 ragava lawrence



பின்னர் செய்தியாளர்கள், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. உங்கள் கருத்து என்ன?" என கேட்க, "நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். வாட்ஸ்-அப்ல மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பல சந்தேகங்கள் எல்லாம் வருது. ஆனா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. ஆனா, ஒன்னு மக்களுக்கு அரசியல் குறித்து அறிவும் விழிப்புணர்வும் அதிகரித்துக்கொண்டே இருக்கு. இது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று பதிலளித்தார்.

தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் அவரிடம் பேச அருகில் சென்றனர். அவர்களிடம் அன்பாகப் பேசிய அவர் அங்கிருந்த குழந்தைகளிடம் கைகொடுத்துப் பேசினார். செல்பி எடுக்க விரும்பியவர்களிடம் "இங்கயுமா" என்று சிரித்துக்கொண்டே செல்பி எடுத்துக்கொடுத்துச் சென்றார்.             

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.