Skip to main content

17,723 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

vjd


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா, இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான  நிலையில் பிரபலங்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுகின்றனர்.
 


ஏழை மக்களுக்கு உதவுவதற்காக விஜய் தேவரகொண்டா, 'விஜய் தேவரகொண்டா' அறக்கட்டளையைத் திறந்தார். தற்போது இதன் மூலம் 17,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். இதுகுறித்து விஜய் தேவரகொண்டா அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  " விஜய் தேவரகொண்டாவின் இந்த அறக்கட்டளை மூலம் இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 8,505 தன்னார்வத் தொண்டர்கள் தங்களை இதில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.
 

 


அறக்கட்டளையில் எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது'' என்று கூறப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"ரூ.1 கோடி பரிசு ஓகே; எங்களுக்கு ரூ. 8 கோடி நஷ்டமே..." - அதிர்ச்சியில் விஜய் தேவரகொண்டா

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

vijay devarakonda shocked about his movie  Distributors company post

 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 7 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் அண்மையில் நடத்தினர். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார். அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தின் விநியோக நிறுவனமான அபிஷேக் பிக்சர்ஸ், அவருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டியர் விஜய் தேவரகொண்டா. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் விநியோகம் செய்ததில் நாங்கள் ரூ. 8 கோடிகளை இழந்துள்ளோம். ஆனால் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.

 

இப்போது நீங்கள் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். தயவுசெய்து எங்களையும் எங்கள் விநியோகஸ்தர்கள் குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைக் கேட்டு விஜய் தேவரகொண்டா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

Next Story

100 குடும்பங்களுக்கு ரூ.1 கோடி - விஜய் தேவரகொண்டா பரிசு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Vijay Deverakonda to Donate Part of Kushi Remuneration

 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. 

 

இந்த வெற்றியை கொண்டாட நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் நடத்தினர். அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு வெற்றியை பகிர்ந்தார். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசிய நிலையில், அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.