Skip to main content

''அவர் போகும் வரை கதவை திறந்தே வைத்திருந்தேன்'' - பாலியல் தொல்லையில் சிக்கிய வித்யா பாலன்!

Published on 28/08/2019 | Edited on 29/08/2019

சில்க் சுமிதாவாக நடித்து தேசிய விருது பெற்று தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமடைந்த நடிகை வித்யா பாலன் தன் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது....
 

vidya balan


''நான் சென்னையில் இருந்தபோது ஒரு இயக்குனர் என்னை சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்று அவரிடம் கூறினேன். அந்த இயக்குனரோ ரூமுக்கு சென்று பேசலாம் என்று வற்புறுத்தினார். அவர் என்னை அறைக்கு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்ததால் வேறு வழியின்றி நானும் ரூமுக்கு சென்றேன். பின் ரூமுக்கு சென்றதும் கதவை திறந்து வைத்தேன். இதனால் கடுப்பான அவர் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்று விட்டார்'' என்றார்.
 

sixer ad

 

 

சார்ந்த செய்திகள்