Skip to main content

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்?

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Vetrimaaran to direct Sahitya Akademi winning novel Sellatha Panam

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் விபத்தில் இறந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

 

ad

 

இந்நிலையில், நாவல்களைத் தழுவி திரைப்படமாக எடுத்து விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன், தற்போது மற்றொரு நாவலைத் திரைப்படமாக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் இமையம் எழுதி சாகித்ய அகாடமி விருது வென்ற 'செல்லாத பணம்' நாவலைத் தழுவி வெற்றிமாறன் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

'செல்லாத பணம்' நாவலில் ஒரு திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் அவரது குடும்பம், சமூகம் போன்றவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது விரிவாகப் பேசப்பட்டிருக்கும். இதுவரை நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை', 'அசுரன்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இயக்கி வரும் 'விடுதலை' படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வருவதும், அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசலும் கூட நாவலைத் தழுவிய கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புக்கர் பரிசு போட்டியில் தமிழ் நாவல்; எழுத்தாளர் பெருமாள் முருகன் மகிழ்ச்சி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

pukar prize nominated perumal murugan pookuzhi tamil novel  

 

இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது புக்கர் பரிசு ஆகும். இந்த விருதானது ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான போட்டியில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "பூக்குழி" என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'பைர்' என்ற நாவல் இடம்பெற்று உள்ளது. இந்த நாவல் 2016 ஆம் ஆண்டு வெளியானது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு செல்வதைப் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இந்த நாவல் கதைக்களமாக கொண்டு விவரிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் அனிருதன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

 

இதுகுறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் முகநூலில், "தமிழ் நாவல் ஒன்று (பூக்குழி) புக்கர் பரிசுக்குரிய நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்". 

 

 

Next Story

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரின் நாவல் திரைப்படமாகிறது!            

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

நாகா்கோவில் மணிகட்டிபொட்டல் பகுதியை சோ்ந்த எழுத்தாளா் பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி ஆவா். சிறுகதை தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரை போன்ற இவரின் இலக்கிய படைப்புகள் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


பல்வேறு ஊா்களில் ஆசிரியராக பணியாற்றி வந்த பொன்னீலன், கோவில்பட்டியில் பணியாற்றும் போது அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும், நிலங்களையும் மையமாக கொண்டு, அவா் எழுதிய கரிசல் எனும் நாவல் 1976 ஆம் ஆண்டு வெளியானது. இது இவருடைய முதல் நாவலாகும். இந்த நிலையில் 1992-ஆம் ஆண்டு வெளி வந்த பொன்னீலனின் புதிய தரிசனங்கள் என்ற நாவல் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த நாவலுக்கு 1994- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

sahitya akademi award novel based movies direct by pc anbalagan


இந்த நிலையில் எழுத்தாளா் பொன்னீலனுக்கு 80 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் எழுத்துலகில் 55 ஆண்டுகள் என்ற இரும்பெரும் விழா 16-ம் தேதி பெரும் விமா்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொன்னீலனை சந்தித்து வாழ்த்து கூறிய திரைப்பட இயக்குனா் பி.சி.அன்பழகன் பொன்னீலன் எழுதிய கரிசல் நாவல் திரைப்படமாக இயக்க போவதாக அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து, அதற்கான அனுமதியையும் கொடுப்பதாக பொன்னீலன் கூறினார்.
 

ஏற்கனவே பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற சிறுகதை திரைப்பட இயக்குனா் மகேந்திரனால் 'பூட்டாத பூட்டு' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.