Skip to main content

“கலைக்கு நிச்சயமா மொழி, கலாச்சாரம், எல்லை இருக்கு..." - வெற்றிமாறன்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

vetrimaaran about art

 

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் தக்‌ஷின் மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான தக்‌ஷின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் கார்த்தி, நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

 

அப்போது வெற்றிமாறன் பேசுகையில், "கலைக்கு மொழி இல்லை, எல்லை இல்லை என்று சொல்வார்கள். ஆனால் கலைக்கு நிச்சயமா மொழி இருக்கு, கலாச்சாரம் இருக்கு, எல்லை இருக்கு, ஆனால் கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும். இது லாக்டவுன் சமயத்தில் நடந்தது. எல்லா ஓடிடி தளத்திலும் எல்லா விதமான படங்களையும் பார்க்க ஆரம்பிச்சோம். லாக்டவுனுக்கு பிறகு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் பழக்கம் மாற ஆரம்பிச்சிருக்கு. இப்போது பான் இந்தியா என்ற பாணியில் நிறைய மக்களை சென்றடையும் படங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் கடந்த 2 வருடங்களாக அப்படி வந்த படங்கள், அவங்க மண்ணுக்கு வெளியில் உள்ளவர்களை டார்கெட் பண்ணி படம் எடுக்கவில்லை. உதாரணத்துக்கு கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா உள்ளிட்ட படங்கள் நிறைய மக்களை சென்றடைவதற்காக ஒவ்வொரு மொழிகளிலிருந்தும் நடிகர்களை தேர்வு செய்யவில்லை. 

 

பெரும்பாலான சமயத்தில் அப்படி செய்யும் போது நாம் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த படங்கள் அனைத்தும் அந்தந்த மக்களுக்காக எடுத்த படங்கள். அந்தந்த மண்ணுக்கு ஏற்றவாறு கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம். இவை அனைத்தும் மற்ற மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாம் நம்முடைய கதையை சொல்கிறோம். ஆனால் அதனுள் இருக்கிற உணர்வு  எல்லாருக்குமான உணர்வாகத்தான் இருக்கிறது. அதற்கு எல்லைகள் கிடையாது. 

 

ஆஸ்கர் விருது வாங்குவதை விட மெயின்ஸ்ட்ரீம் படங்களை எடுத்து பாராட்டு வாங்குவது தான் சிறந்தது. இது தான் ஒரு நல்ல மாற்றத்திக்கான முன்னேற்பாடாக பார்க்கிறேன். தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நம்முடைய கதைகளை நம் மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் இன்றைக்கு இந்திய மார்க்கெட்டில் தென்னிந்திய மெயின்ஸ்ட்ரீம் படங்கள் ஒரு தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன. மற்ற மொழிகளின் திரைத்துறைகள் அதைப் பின்பற்றாததால் பின்னடைவை சந்திக்கின்றன. நாம் நம்முடைய அடையாளங்களோடு; நம்முடைய தனித்துவங்களோடு; நம்முடைய பெருமைகளோடு படங்கள் பண்றது தான் நம்முடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். இதே நிலை தொடரும் என நம்புகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.