Skip to main content

அழகாக இருக்க ஆசைப்படும் பெண்களுக்கு வரலட்சுமி சரத்குமார் சொல்லும் உண்மை!!!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

நடிகைகளை எந்த நேரம் பார்த்தாலும் அழகான சுந்தரிகளாகவே தான் இருக்கிறார்கள். சினிமாவில் பார்ப்பது போல் தான் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளிலும் அழகாக இருக்கிறார்கள் என்று எல்லோரின் மனதில் தோன்றுவது உண்மை தான். மென்மையான தேகம் அழகான உதடுகள் என்று வர்ணிப்பவர்களும் உண்டு. நடிகைகைள் மாதிரி நாமும் இருக்க மாட்டோமா? என்று சிலருக்கு தோன்றுவதும் உண்டு.
 

varalakshmi

 

வெளியே செல்லும் போது அவர்கள் நடிகைகள் என்பதை விட அவர்களின் அழகை பார்க்க தான் கூடுவார்கள்.இதற்கு காரணம் நடிகைகள் அல்ல அந்த நடிகைகளை அழகாய் செதுக்குகிற மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகளின் உழைப்பு தான்.
 

super duper


தூக்கம் முடிந்து காலையில் எழும்பும் போது சாதாரண பெண்களை போல் தான் இருக்கிறோம். அதன் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் மேக்கப் ஆர்ட்டிஸ்டுகளின் உழைப்பில் நாங்க பூரண சுந்தரிகளாக தெரிகிறோம். இந்த உண்மையை நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்