Skip to main content

வீட்டிலேயே திருமணத்தை முடித்த இயக்குனர்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
vanjagar ulagam

 

 

கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அதிகம் கூட்டம் இடங்களாக இருக்கும் திருமண மண்டபங்கள் திறக்கப்படாமல் இருக்கிறது. அப்படி திருமணங்களை நடத்த வேண்டுமானால் குறைந்த அளவிலானவர்களை கொண்டு அவரவர் வீட்டிலேயே திருமணம்  நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

இதுபோல பல பிரபலங்கள் தங்கள் வீட்டில், பண்ணை வீட்டில் தெரிந்தவர்களை மட்டும் அழைத்து திருமணத்தை நடத்தினார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனோஜ் பீதாவிற்கு நடிகை ஷாலினி என்பவருடன் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்