Skip to main content

வலிமை அப்டேட்... முதலமைச்சர் தொடங்கி ஆட்டோ வரை... காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

valimai

 

 

'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு, அஜித் - எச்.வினோத் இணையும் படம் 'வலிமை'. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தொற்று பரவலால் தாமதமாகி, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது. 

 

சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில், அஜித்தும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில்,ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. 

 

படம் பூஜை போட்டதற்கு பிறகு வலிமை படக்குழுவிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் அப்டேட் கேட்டு ட்விட்டரில் அவ்வப்போது அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான சில ரசிகர்கள் கொச்சையாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினார்கள்.

 

மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வரும்போதெல்லாம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் குறித்து சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அஜித் தரப்பிலிருந்தும் இதற்கு விளக்கம் தெரிவித்து ஒரு சிறிய அறிக்கை வெளியிட்டார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

 

இந்நிலையில் சமூகவலைதளத்தில் வலிமை அப்டேட் கேட்டு வந்தநிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தனது ஆட்டோவில் வலிமை அப்டேட்டிற்காக காத்திருப்பதாக ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

கடந்த வாரம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட ‘வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க, உங்களுக்கு ஓட்டு போடுறோம் என்று அஜித் ரசிகர்கள் கூறிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.