Skip to main content

“சின்ன பையா பேட் பந்துடன்தான் விளையாடனும்” - ரிஷப் பண்ட் மீது கடுப்பான ஊர்வசி ரவுடேலா 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

urvashirautela replay for rishabh pant insta post

 

பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஊர்வசி ரவுடேலா தமிழில் அண்மையில் வெளியான லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் எனக்கு ஏகப்பட்ட லவ் ப்ரோபோசல் வந்துள்ளது. அதிலும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னைப் பார்க்க நீண்ட நேரம்  ஹோட்டலில் காத்திருந்தார். அத்துடன் இரண்டு மனைவிகளுடன் இருக்கும் எகிப்து பாடகர் ஒருவரும் எனக்கு ப்ரோபோஸ் செய்ததாக தெரிவித்தார். மேலும் அவரின் பெயரை குறிப்பிட விரும்பாத ஊர்வசி ரவுடேலா அந்த ப்ரோபோஸலை தான் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார். இதில் ஊர்வசி ரவுடேலா அந்த கிரிக்கெட் வீரரின் பெயரை ஆர்பி (RP) என்று குறிப்பிட்டிருந்தார்.

 

ad

 

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை டேக் செய்து இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், தன் பெயர் தலைப்பு செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவும் சிலர் நேர்காணலில் இப்படி பொய் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. சிலர் புகழுக்காகவும், பெயருக்காகவும் இவ்வாறு பேசுவதெல்லாம் வருத்தமளிக்கிறது. கடவுள்தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஊர்வசி ரவுடேலா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சின்ன பையா பேட் பந்துடன் விளையாட வேண்டும் என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பாடகர் பரிசளித்த தங்க கேக் - விமர்சனத்திற்கு உள்ளான லெஜண்ட் பட நடிகை

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Urvashi Rautela cuts 24-carat gold cake with Honey Singh gets criticise

பாலிவுட்டில் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடியும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் ஊர்வசி ரவுதெலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘தி லெஜண்ட்’ படம் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தியை தவிர்த்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆல்பம் பாடல்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல ராப் பாடகர் ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்ற ஆல்பத்தில் நடித்து வருகிறார். 

அதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (25.02.2024) தனது 30வது பிறந்தநாளை ஊர்வசி ரவுதெலா கொண்டாடிய நிலையில், பாடகர் ஹனி சிங் அவருக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை ஊர்வசி ரவுதெலா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.