Skip to main content

ஓடிடி வருகை; வருத்தம் தெரிவித்த உபேந்திரா

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Upendra Interview

 

உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்துள்ள 'கப்ஜா' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மற்றும் திரையுலகம் குறித்து பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நடிகர் உபேந்திரா பகிர்ந்து கொள்கிறார்.

 

நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்காத, நல்ல இயக்குநர்கள் கிடைக்காத ஆரம்ப காலத்திலிருந்தே ஏதாவது வித்தியாசமான முயற்சிகளைச் செய்ய வேண்டும். மக்கள் விரும்பும் வகையிலான படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதுதான் இன்று கப்ஜா வரை தொடர்கிறது. பீரியட் படங்களை எடுப்பது மிகவும் கடினமான பணி. அந்தப் பணியை கப்ஜா படத்தின் இயக்குநர் சந்துரு மிகத் திறமையாக செய்திருக்கிறார். பீரியட் படங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் படத்தில் நான் நடித்தபோது அதை மிகவும் ரசித்து செய்தேன். இயக்குநராக அறிமுகமாகி அதன் பிறகு என்னை நானே ஹீரோவாக வைத்து இயக்கி வந்தேன். பிறகு வேறு ஒரு இயக்குநரின் இயக்கத்தில் நான் நடிக்கும்போது முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகுதான் நடிகராக இருக்கும்போது எனக்குள் இருக்கும் இயக்குநரை நான் அமைதிப்படுத்தினேன். இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.

 

தமிழில் எனக்கு ரஜினி சார் படங்கள், கமல் சார் படங்கள், பாலச்சந்தர் சார் படங்கள், மணிரத்னம் சார் படங்கள், ஷங்கர் சார் படங்கள் மிகவும் பிடிக்கும். என்னுடைய அடுத்த படத்தின் கதை எனக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பு குறித்த ஒன்று. நான் தொடங்கியிருக்கும் கட்சியில் கூட ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும் உரிமை ரசிகர்களிடம் தான் இருக்கிறது. தற்போது ஓடிடியின் வருகையால் திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது வருத்தமாக உள்ளது. ஆனால் 'கப்ஜா' படத்தின் பிரம்மாண்டம் பெரிய திரையில் காணும்போது உங்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என்பது உறுதி. எனவே இந்தப் படத்தை நிச்சயம் தியேட்டரில் பாருங்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.