Skip to main content

“அதிகபட்சம் 60 பேர் கலந்துகொள்ளலாம்”- சின்னத்திரை ஷூட்டிங்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

eps


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 8,000 பேராக உயர்ந்துள்ளது.
 


இதனிடையே கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்ற துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது.

அண்மையில் தமிழக அரசு வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியது. தற்போது சின்னத்திரைக்கு வழங்கிய அனுமதியில் மொத்தமாக 60 பேர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்புகள் நாளை (31/05/2020) முதல் துவங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பின் போது, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அதிகபட்சம் 60 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதரவு யாருக்கு? - பாஜக எடுக்கப் போகும் முடிவு

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Annamalai consultation on Erode East by-election

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.

 

அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை தமாகா மட்டுமே தற்போது அதிமுக இபிஎஸ் தரப்பை ஆதரிக்கிறது. பாஜக தனது ஆதரவை இன்னும் சொல்லாத நிலையில் மற்ற கட்சிகள் அதிமுகவை ஆதரிப்பதாக தற்போது வரை சொல்லவில்லை. இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் கேட்ட பொழுது இரட்டை இலைச் சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே ஆதரவு எனக் கூறியிருந்தார்.

 

மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் நிச்சயம் தனது வேட்பாளரை அறிவிப்பார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவை பாஜக நாளை எடுக்க உள்ளது. 

 

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி நாளை மாலை 3 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

Next Story

“வறட்சி, கஜா புயல்,வெள்ளம் சீர் செய்தது அதிமுக” - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 11/12/2022 | Edited on 12/12/2022

 

Edappadi Palaniswami speech at thirupur about drought all over Tamil Nadu

 

நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கடுமையான வறட்சி குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் பகுதியில் பிறகட்சியினர் அதிமுகவில் இணையும் இணைப்புவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுவரை 52 லட்சம் மாணவர்களுக்கு 12 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோதும் அவர் மறைந்த பின்னும் நாங்கள் தொடர்ந்து கொடுத்தோம். கிராமத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க அரசின் சார்பாக மடிக்கணினி வழங்கப்பட்டது. அதையும் கைவிட்டுட்டாங்க. அதிமுக எதை எல்லாம் கொண்டு வந்ததோ அதை எல்லாம் திமுக கைவிட்டுவிட்டது. 

 

நான் முதலமைச்சராக பொறுப்பேற்கின்ற பொழுது கடுமையான வறட்சி குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்தேன். தமிழகம் முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வறட்சிக்காலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்கினோம்.  அதன் பின் கஜா புயல். அதனால் ஏற்பட்ட வெள்ளம். டெல்டா மாவட்டம் முழுவதும் கடுமையான சேதம். அதை சீர் செய்தது அதிமுக” என கூறினார்.