Skip to main content

"கார் அதற்காகத் தான் வாங்கப்பட்டது" - எஸ்.ஜே.சூர்யா பேட்டி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 

"The title is valid; the car was bought for it"- SJ Surya speech!

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, "டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம்ல 'வதந்தி' வெப் சீரிஸ் இன்டர்நேஷனல் அளவுல வெளியாக உள்ளது. இன்னைக்கு ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு. நல்லா என்ஜாய் பண்ணுங்க. இது நம்ம எல்லாருடைய வெற்றியா பாக்கறேன். பிளீஸ், டூ வாட்ச் வதந்தி ஆன் ப்ரைம். 'கில்லர்' டைட்டில் இஸ் கன்பார்ம்; காரும் அதுக்காக வாங்கப்பட்டது தான். ஏன் டேட்டே இன்னும் நாலு மாசம் கழிச்சி தான் எனக்கு கிடைக்கும் போல இருக்கு.

 

கூடியே சீக்கிரம் அதோட அப்டேட்லாம் தரன், நான்ஸ்டாப்பா படங்கள் வரிசையா ரிலீஸ் ஆகுது. இப்போ டிசம்பர் 2- ஆம் தேதி இந்த வெப் சீரிஸ். அப்புறம் டிசம்பர் 12- ஆம் தேதி முக்கியமான அனௌன்ஸ்மென்ட் ஒன்னு வருது. அதுவும் பாருங்க. பிப்ரவரில பொம்மை ரிலீஸ் பிளான் பண்ணிருக்கேன். இதற்கிடையில மார்க் ஆண்டனி, இன்னும் ரெண்டு படலாம் முடிச்சிட்டு, ஏப்ரல்ல கில்லர் ஸ்டார்ட் பண்லாம். 

 

தியேட்டர் ஒரு கண்ணுனா; ஓடிடி-யை இன்னொரு கண்ணா தான் பாக்கறேன். விஷால் சார் எனக்கு ரொம்ப பிரதர் மாதிரி ஆகிட்டாரு. ஹீ இஸ் சச் எ ஸ்வீட் பர்சன். சூட்டிங் ஸ்பாட்ல என்ஜாய் பண்ணி, என்ஜாய் பண்ணி நடிக்கறேன். எனக்குன்னு கிரேட் கண்டன்ட் வரும் போது, நான் அத ரொம்ப சந்தோஷமா ஏத்துட்டு தான் நடிக்கிறேன்." என்றார்.

 

அப்போது செய்தியாளர்களின் நடிகர்கள் விஜய், அஜித் வைத்து படம் எடுக்க வாய்ப்பு இருக்கா? என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, "நான் என்னை வச்சி டைரக்ட் பண்றதுக்கே டைம் இல்லாம இருக்கு. பாப்போம், இறைவன் அப்படி எதாவது அமைச்சா நல்லது நடக்கட்டும்" என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

Next Story

“கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்” - எஸ்.ஜே சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj surya suffering from viral fever

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். தன்னை ஒரு பட நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில் அதற்கு வரமுடியாமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்த பதிவில் இதை குறிப்பிட்டுள்ளார். பாபி சிம்ஹா, மேத்யூ வர்கீஸ், வேதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஸாக்கர். கூடூர் நாராயண ரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாத சத்யநாராயணா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ளும்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதில் கலந்துகொள்ளாத சூழலில் இருப்பதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டியர் தம்பி பாபி சிம்ஹா கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் தம்பி. மேலும் படத்தின் வெற்றி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் எஸ்.ஜே சூர்யாவின் உடல் நலம் தேறி வருமாறு கமெண்ட் செய்த நிலையில், அது தொடர்பாக பதிவிட்ட எஸ்.ஜே சூர்யா, “4வது நாளாக முன்னேறி வருகிறோம். அன்பிற்காக எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.