Skip to main content

இந்திய ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ‘தோர்’ பட நாயகன்...

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

மார்வெல் சூப்பர் ஹீரோவான தோர் கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில், ரஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

chris hemsworth


முதலில் இப்படத்திற்கு தாகா என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னர், எக்ஸ்ட்ராக்‌ஷன் என்று மாற்றியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் இந்தியாவிலுள்ள அகமதாபாத், மும்பை பாந்த்ரா உள்ளிட்ட பகுதிகளில் உருவானது. மேலும் இப்படத்தில் ரந்தீப் ஹூடா, பங்கஜ் த்ரிபதி, பியான்ஷு பைன்யுல்லி உள்ளிட்ட பல இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புரொமோஷனுக்காக கிறிஸ், மார்ச் 16ஆம் தேதி இந்தியா வருவதாக இருந்தது. கரோனா அச்சத்தால் இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் நிகழ்ச்சி ரத்தானது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் முழு ஆக்‌ஷன் பேக்குடன் வெளியாகியுள்ளது. 
 

nakkheeran app



முன்னதாக நேற்று நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ட்ரைலர் வெளியாவதை முன்னிட்டு, இந்திய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டிருந்தார். அதில், "நமஸ்தே இந்தியா. ஆஸ்திரேலியாவிலிருந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பேசுகிறேன். இந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பை மறக்கவே முடியாது. மீண்டும் அங்கு வர ஆவலாக இருக்கிறேன்.

ஆனால், இப்போது உலகில் என்ன நடக்கிறது என உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் வீட்டில் இருக்கிறேன். இப்போது அனைவருக்கும் கடினமான சூழல் என்று எனக்குத் தெரியும். எனவே நீங்கள் ரசிப்பீர்கள் என்று ஒரு விஷயத்தைப் பகிர விரும்பினேன். அடுத்து வெளிவரவுள்ள எனது எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து இருங்கள். இது ஒரு அற்புதமான ஆக்‌ஷன் படம். என் நண்பர் சாம் ஹர்க்ரேவ் இயக்கியது. ஏப்ரல் 24 அன்று நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சிறந்த இந்திய நடிகர்கள் சிலருடன் நடித்ததில் எனக்குப் பெருமையாக உள்ளது. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். அனைவருக்கும் என் அன்பு, நல்லெண்ணங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்" என்று அதில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு பிடித்த தோர் கதாபாத்திரத்திலிருந்து விலகலா? - நடிகர் விளக்கம்! 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
thor

 

 

மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தோர். இந்த கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகமாகினார்கள். குறிப்பாக இந்தியாவில் பெரும் ரசிக பட்டாளாமே உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் முடிவடைந்த பிறகு மார்வெல் தயாரிப்பு நிறுவனம் அடுத்த மார்வெல் படங்களை இயக்க திட்டமிட்டுள்ளாது.

 

இதில் அடுத்த வருடம் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குனர் டைகா வைடிடி இந்த படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் படங்களில் தோன்றிய நடாலி போர்ட்மேனும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த படத்துடன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தோர் கதாபாத்திரத்திலிருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி சமூகவலைதளத்தில் அவரிடம் கேள்வியை எழுப்பினார்கள். 

 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், “தோர் கதாபாத்திரத்துக்கு வெறும் 1500 வயது தான் ஆகிறது. நிச்சயமாக இந்த படத்தோடு நான் இந்த கதாபாத்திரத்தை விட்டு விலகப் போவதில்லை. குறைந்த பட்சம் அப்படி நடக்காது என்றும் நம்புகிறேன்.

 

இப்படத்தின் கதையை படித்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உறுதியாக இப்படத்தில் நிறைய காதலும், மின்னல்களும் இருக்கும். 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்துக்கு பிறகும் நான் மார்வெல் உலகத்தில் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

இந்தியாவில் எடுக்கப்பட்ட மார்வெல் நடிகர் படத்தின் ட்ரைலர் வெளியானது!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020


மார்வெல் சூப்பர் ஹீரோவான தோர் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தில் நடித்ததைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் மற்றும் ரஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

chris hemsworth


முதலில் இப்படத்திற்கு 'தாகா' என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னர், 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்று மாற்றியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் இந்தியாவிலுள்ள அகமதாபாத், மும்பை பாந்த்ரா உள்ளிட்ட பகுதிகளில் உருவானது.மேலும் இப்படத்தில் ரந்தீப் ஹூடா, பங்கஜ் த்ரிபதி, பியான்ஷு பைன்யுல்லி உள்ளிட்ட பல இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக கிறிஸ் மார்ச் 16ஆம் தேதி இந்தியா வருவதாக இருந்தது. கரோனா அச்சத்தால் இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் நிகழ்ச்சி ரத்தானது.நேற்று தனது இந்திய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.