Skip to main content

"இந்த படத்தின் சிறப்பே அதுதான்" - திருமாவளவன் எம்.பி பாராட்டு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

thirumavalavan about tamilkudimagan movie

 

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழ்க்குடிமகன்'. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் லால், அருள்தாஸ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சாதிய சிக்கல் குறித்து, சாதிய முரண் குறித்து பேசுகிற ஒரு படம். எத்தனையோ படங்கள் இது குறித்து வெளிவந்திருந்தாலும் இப்படம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறது. கதாநாயகனாக சேரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

அவரை சுற்றியே கதை அமைப்பு இருந்தாலும் கூட தனி நபராக தீர்வு கண்டுவிடுவார் என சொல்லாமல் அவருக்கு உற்ற துணையாக இங்க இருக்கிற முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக அமைப்புகள், சட்டம், காவல் துறை, நீதிமன்றம் போன்ற அனைத்தின் ஆதரவோடும் அவர் தன்னுடைய போராட்டத்தில் வெற்றிபெறுகிறார். இந்த படத்தின் சிறப்பே அதுதான். இதுவரையில் சாதிய முரண்களை பேசிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தீர்வை சொல்லுகிற, நடைமுறை சாத்திய கூறுகளை சொல்லுகிற ஒரு திரைப்படம் என்பதால் நான் நெஞ்சார பாராட்டுகிறேன" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
vck president thirumavalavan anoounced 20204 ambedkar sudar award to prakash raj

பிரகாஷ் ராஜ், நடிப்பைத் தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என மற்ற தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏழு கட்ட வாக்குப்பதிவில், இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, பெங்களூருவில் வாக்களித்த பிரகாஷ் ராஜ், மாற்றத்திற்காக மற்றும் வெறுப்பிற்கு எதிராக வாக்களித்ததாக கூறினார். 

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் பிரகாஷ் ராஜுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வி.சி.க. சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறப்பாக தொண்டாற்றும் நபர்களுக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

2007ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பிரகாஷ்ராஜுக்கு வழங்குவதாக வி.சி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வி.சி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதுகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி, (25.05.2024) சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது திருமாவளவனும்,பிரகாஷ் ராஜும் சந்திப்பு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யாவிற்கு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.  

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.