Skip to main content

“ஹீரோ மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதால் நீக்கப்பட்டேன்” - தனுஷ் பட நடிகை!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

tapsee

 

'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி. இந்தப் படத்தை தொடர்ந்து 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார். தென்னிந்தியத் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, அதன் பிறகு பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய டாப்ஸி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 

சமீபத்தில் அவருக்கு சினிமா துறையில் நடைபெற்ற அவமானங்கள் குறித்து ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "ஒரு நாயகனின் மனைவிக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதால், நான் ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். ஒரு முறை படத்தின் நாயகனுக்கு நான் பேசிய வசனம் பிடிக்கவில்லை என்பதால் என்னை அதை மாற்றச் சொன்னார். ஆனால், நான் மறுத்த போது வேறொரு டப்பிங் கலைஞரை வைத்து எனக்குத் தெரியாமல் பேச வைத்தார்கள். மேலும், ஒரு படத்தில் நாயகனின் காட்சியை விட எனது அறிமுகக் காட்சி சிறப்பாக இருந்ததால் எனது காட்சியை மாற்ற வைத்தார். ஒரு நாயகனின் முந்தைய திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால், எனது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

 

இப்படி என் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்பத்தில் பலவிதமான எதிர்மறை அனுபவங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் பணியாற்றுவதில் மகிழ்ச்சி தரும் திரைப்படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்த பிறகு ஒரு சில நாயகர்கள், அந்த நாயகியை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டுமா என்று தயங்க ஆரம்பித்துவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடவுள் அவமதிப்பு? - டாப்ஸிக்கு வலுக்கும் கண்டனங்கள்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Taapsee Pannu Trolled For Wearing Goddess Lakshmi Necklace

 

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. 

 

சமீபத்தில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்து கொண்டார். அப்போது அணிவகுப்பு நடைபெற்றது. அதில் டாப்ஸி அணிந்து வந்த உடையும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆபரணங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாப்ஸி சிவப்பு நிற கவுனும் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸும் அணிந்திருந்தார்.  

 

இந்த நிலையில் கவர்ச்சி உடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை அவர் எப்படி அணியலாம் என சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக டாப்ஸியின் செயல் உள்ளதாக கூறி கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

 

 

Next Story

மித்தாலி ராஜின் பயோபிக் ; ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Mithali Raj's biopic; The film crew released the trailer

 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. அந்தவகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை வைத்து பாலிவுட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது. 'சபாஷ் மித்து' என்ற தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்சி பன்னு நடிக்கிறர். 'வியாகாம்18 ஸ்டுடியோஸ்' தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்க அமித் திரிவேதி இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ஒரு போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்றது. 

 

இந்நிலையில் 'சபாஷ் மித்து' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர், மித்தாலி ராஜா வாழ்க்கையோடு சேர்த்து கிரிக்கெட் விளையாட்டில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளையும் பேசுவது போல் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.