Skip to main content

"இது வெறும் ஆரம்பம்தான்" -சுரேஷ் ரெய்னாவை வாழ்த்திய சூர்யா..

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
suriya raina

 

 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் சமீபத்தில், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மிஸ்டர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் ரெய்னா, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலும் ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக, அத்தொடரிலிருந்து விலகிய ரெய்னா, ஜம்மு காஷ்மீரில் உள்ள, பின்தங்கிய சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க, கிரிக்கெட் அகாடமி தொடங்கும் முயற்சியில் தீவிரமாக  ஈடுபட்டுவருகிறார்.

 

சுரேஷ் ரெய்னாவும், நடிகர் சூர்யாவும் நண்பர்களாவார்கள். என்.ஜி.கே. படத்தின் விளம்பரத்திற்காக, சூர்யா சமூக வலைதளத்தில் லைவ் வந்தபோது, அதில் சுரேஷ் ரெய்னா கலந்துகொண்டு, உங்களுக்கு பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் யார்? என கேட்டதும், அதற்கு சூர்யா தோனி என பதிலளித்தோடு, லைவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில், சுரேஷ் ரெய்னா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா, ஜம்மு & காஷ்மீர்  கிரிக்கெட்டர்களின் திறமையை வெளிக்கொணர ரெய்னா எடுக்கும் முயற்சியை பாராட்டியதோடு, இது வெறும் ஆரம்பம்தான் என கூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. ஜம்மு & காஷ்மீரின் வளரும் கிரிக்கெட்டர்களோடு நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைய வாழ்த்துகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.