Skip to main content

“எதுக்கு நான் லாயக்கு, நான் பிரயோஜனமாக மத்தவங்களுக்கு என்ன செய்யப்போறேன்”- மேடையில் சூர்யா உருக்கம்

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

நடிகர் சூர்யா திரையில் நடிப்பதை தாண்டி கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு உதவும் வகையில் தன்னுடைய அகரம் அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார். இந்நிலையில் நேற்று சென்னை தி. நகரில் அகரம் அறக்கட்டளை சார்பில்  ‘வித்தியாசம் தான் அழகு’ ,  ‘உலகம் பிறந்தது நமக்காக’ என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டயன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

surya

 

 

அப்போது பேசிய நடிகர் சூர்யா, “நன்றாக படிக்காததால் வீட்டுக்கு வருபவர்கள் எதாவது படிப்பு சம்மந்தமாக கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று  கூச்சத்தோடு ஒதுங்கி நின்று இருக்கிறேன். எனக்கு பல வசதிகள் இருந்தும் கல்வியிலும் சரி, பல விஷயங்களில் நான் பின் தங்கிய மாணவனாகதான் இருந்திருக்கிறேன். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு என்ன செய்யப்போகிறேன் என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். எப்படி என்னுடையா அப்பா பெயரை காப்பாற்ற போகிறேன் என்கிற பயம் இருந்தது. எதற்கு நான் லாயக்கு, நான் பிரயோஜனமாக மற்றவர்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்று பல கேள்விகள் இருந்தன. நடிகனுக்கான எந்த தகுதியும் இல்லாமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகனானேன். தகுதி இல்லாத என்னை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

அதன் காரணமாகவே என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு திருப்பி உதவும் முயற்சியாகவே அகரம் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலமாக 2,500 மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி மூலம் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோம்.

அடுத்தகட்டமாக இணை என்கிற ஒரு திட்டத்தை தொடக்கி முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்” என்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அகரம் அறக்கட்டளையின் முன்னாள் மாணவி தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன், அதற்கு அகரம் அறக்கட்டளை எவ்வளவு உதவியது என்பதை தெரிவித்தார். அதை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் சூர்யா மேடையிலேயே கண் கலங்கி, அந்த மாணவி பேசி முடித்தவுடன் அரவணைத்துக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

‘ஜெய்பீம்’ அங்கீகாரம் சிலிர்ப்பூட்டுகிறது; முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

 The 'Jaibhim' recognition Thanks Surya

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர் சூர்யா தமிழ்நாடு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் “ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள் எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடையச் செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.