Skip to main content

கௌதம் மேனனோடு இணைவதை உறுதிப்படுத்திய சூர்யா..

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

surya - gvm

 

'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத இரண்டு படங்களை தந்த கூட்டணி, கௌதம் மேனன் - சூர்யா கூட்டணி. கௌதம் மேனனும் சூர்யாவும் மூன்றாவது முறையாக 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்பு துருவ நட்சத்திரம் படத்தை, விக்ரமை வைத்து இயக்கினார் கௌதம் மேனன். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. 
 

சூர்யா-கௌதம் மேனன் மீண்டும் இணைவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சமீபத்தில் கெளதம் மேனன், சூர்யாவுக்காக கதை ஒன்றை எழுதி வருவதாகவும், அது  இரண்டு இசையமைப்பாளர்களின் இடையேயான காதல் பற்றிய கதை எனவும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சூர்யா-கெளதம் மேனன் இணையும் படம் பற்றி, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யா, வெற்றிமாறன், பாண்டிராஜ் என வேறு இயக்குநர்களோடு இணைவதாக அறிவிப்புகள் வெளிவந்தன. இதனால் சூர்யா- கௌதம் மேனன் இணைவது தாமதமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்த நிலையில், மணிரத்தினம் தயாரிக்கும் 'நவரசா' அந்தாலஜியில், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடிக்க, கௌதம் மேனன், கே.வி. ஆனந்த் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த இயக்குனர், எந்த கதாநாயகனை இயக்குவார் என அறிவிக்கப்படவில்லை. இதிலாவது சூர்யாவும்- கௌதம் மேனனும் இணைவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கௌதம் மேனன் இயக்கத்தில், 'நவரசா' அந்தாலஜியில் நடிப்பதை சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

டேனியல் பாலாஜி மறைவு குறித்து சூர்யா வேதனை பதிவு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
suriya condolence post for daniel balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதில் அதர்வா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜய் சேதுபதியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில் சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், டேனியல் பாலாஜி மறைவு குறித்து கூறுகையில், “டேனியல் பாலாஜி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. ஒரு ஷாட் சரியாக வருவதற்கு கடுமையாக உழைப்பார். காக்க காக்க படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களின் இனிய நினைவுகள் இன்னும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.