Skip to main content

சூர்யா பிறந்தாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் படக்குழு...

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.  
 

surya kappan

 

 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து சிறுக்கி என்றொரு பாடல் வெளியான நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்று இன்று  காலை 11 மணிக்கு  அறிவிக்க இருப்பதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. 


இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 21ஆம் தேதி அன்று மிக பெரியளவில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும். அதில் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீழ்ந்துவிட்டாரா சூர்யா?

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

surya

 

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான படம் காப்பான். சூர்யா - இயக்குனர் கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் இதுவாகும். முதன் முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான ‘அயன்’ படம் பெரிய வெற்றிபெற்றது. ஏ.வி.எம். நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் ’மாற்றான்’ வெளியானது. அயன் அடைந்த வெற்றியினால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ஒரளவிற்குதான் பேசப்பட்டது. மூன்றாவதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ’காப்பான்’ படத்திற்கு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்தன.

 

‘காப்பான்’ படத்திற்கு முன்பாக வெளியான படங்களான ’என்.ஜி.கே’, ’தானா சேர்ந்த கூட்டம்’, ’24’, ’மாசு என்கிற மாசிலாமணி’, ’அஞ்சான்’ உள்ளிட்ட படங்களும் சூர்யாவிற்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வந்த சிங்கம்-3 மட்டுமே வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சிலர், சமீபத்திய அரசியல் பேச்சுகளால் சூர்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது எனவும், சூர்யாவின் சினிமா பயணம் அவ்வளவுதான் எனவும் பேசினர். அவர்கள் பேசும் அளவிற்கு சூர்யா வீழ்ந்துவிட்டாரா என்ன?

 

vijay surya

 

சரி, இப்போது வீழ்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்தது. வாரிசு நடிகராக இருந்தாலும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் மிகக் கடினமானதாகவே இருந்தது. முதல் படமான ‘நேருக்கு நேர்’ வெற்றி பெற்றாலும் அதற்குப் பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘நந்தா’ திரைப்படம்தான் ஒரு நாயகனாக நிலை நிறுத்தியது. கமர்ஷியல் வெற்றி என்றால் அது ‘காக்க காக்க’வில் இருந்துதான் - இதுதான் முறையான கமர்ஷியல் வெற்றி.

 

அதற்கு முன்புவரை நடிக்க தெரியாதவர், நடனமாட தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாகக் கிண்டல் செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்து முன்னணி ஹீரோவானார் சூர்யா. தமிழ் சினிமா வரலாற்றைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் அதில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. ஆரம்பக்கட்டம், சற்று கடுமையாகவும், கரடுமுரடாகவும் இருந்து அதைத் தாண்டி விடாமுயற்சியோடு தொடர்ந்தவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும்.

 

இப்படித் தோல்விகளைக் கடந்து முன்னணி நாயகனான சூர்யா நடிப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது 'அகரம்' அறக்கட்டளை மூலமாக வாய்ப்பிழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கைத்தூக்கிவிடுகிறார். சமீப காலமாக பல்வேறு பொது பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மேலோட்டமானவை அல்ல. இப்படிக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வரும் சூர்யாவிற்கு இந்த இடைவெளி ஒரு வீழ்ச்சி அல்ல. இப்போது ‘சூரரைப் போற்று’ குறித்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

“ஒரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார் ‘உனக்கு எப்படிடா தூக்கம் வருது. இன்னும் எதையும் சாதிக்காம’ என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றிபெறும்வரை சரியாகத் தூங்கியது கிடையாது”- இது சூர்யா ஒரு பேட்டியில் கூறியது. இப்படிப்பட்ட அவர் மீண்டும் தன்னிடத்திற்கு வருவார். வரும்வரை உறங்க மாட்டார்!

 

 

Next Story

சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் யார்..? வெளியான புதிய தகவல்!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019
suriya

 

dgsdgs

 

ஓரளவு வரவேற்பு பெற்ற காப்பான் படத்தையடுத்து நடிகர் சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா அடுத்தாக ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க, கெளதம் வாசுதேவன் - சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிவுள்ளதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Pollution