Skip to main content

கரோனா தொற்றில் இருந்த மீண்ட தமிழ் நடிகை!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

Sunaina

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

 

இந்த நிலையில், சமீபத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த நடிகை சுனைனா, கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுனைனா, "2 வார கால தனிமைப்படுத்தலுக்கு பிறகு கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளேன். நான் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, கரோனா பாதிப்பின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நாட்டு மக்களுக்கு மன அழுத்தலிருந்து தளர்ச்சி அளிக்கவும் உதவும் என்று நம்புகிறேன். கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவமனையில் சுனைனா திடீர் அனுமதி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Sunaina suddenly admitted in  hospital

 

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனைனா, நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்த இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெளியானது. 

 

இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இதுபோன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசி மேடையிலே கண்ணீர் விட்டிருந்தார். இது பரவலாகப் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் ஒரு புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சுனைனா. விரைவில் வலிமையுடன் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்ற காரணத்தை அவர் பகிரவில்லை. அதையும் விரைவில் பகிரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுனைனாவின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

 

 

 

Next Story

வாழ்க்கை முறையை எளிமையாக்க வேண்டும் - சுனைனா வேண்டுகோள்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Sunaina Interview

 

ரெஜினா படத்தில் நடித்த நடிகை சுனைனாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். நம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

வெரைட்டியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வம்சம், நீர்ப்பறவை போன்ற கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்கும்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் என்னுடைய கேரக்டர்களுக்காக அவற்றை நான் கற்றுக்கொண்டேன். ரெஜினா கேரக்டரும் நன்றாக வருவதற்காக நான் என்னுடைய உழைப்பை வழங்கியிருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

 

பாண்டிராஜ் சாரின் படத்தில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொண்டேன். எப்படிப் பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்று நிறைய தெரிந்துகொண்டேன். அந்த ஷூட்டிங்கில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. சந்தோஷமாக நடித்தேன். சமுதாயத்திற்கு என்னால் செய்ய முடிந்த நல்ல விஷயங்களை நான் செய்துகொண்டிருக்கிறேன். விஜய் சார் செய்து வருவது நல்ல விஷயம். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் உதவி செய்வதைப் பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்களும் அதுபோல் உதவிகள் செய்ய வாய்ப்பிருக்கிறது. மக்களுடைய வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரெஜினா ஒரு சிம்பிளான குடும்பப் பெண். அவளுடைய பயணம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன். இந்தப் படம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும்.

 

லிவிங் டுகெதர் என்பது அவரவர் விருப்பம் தான். என்னுடைய திருமணம், எனக்கான நபரை நான் கண்டுபிடித்த பிறகு நடக்கும். யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. ஒரு த்ரில்லராக இருந்தாலும் ரெஜினா படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தப் படத்துக்கு கேரள ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு எமோஷனல் த்ரில்லராக, வித்தியாசமான ஒரு படமாக இது இருக்கும்.