Skip to main content

மீண்டும் ஒரு உண்மை கதை; 'கே.ஜி.எஃப்' டீமுடன் இணைந்த சுதா கொங்கரா

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

sudha kongara joins kgf producer Vijay Kiragandur next movie

 

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஆண் இயக்குநர்கள் கோலோச்சும் காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளனர் சுதா கொங்கரா. 'துரோகி ' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று படத்தை இயக்கியதன் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிருந்தார். இப்படம் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றதோடு, சுதா கொங்கராவை முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்த்தியது. 

 

இந்நிலையில் சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய முழுவதும் பெரும் வசூல் சாதனை படைத்தது வரும் 'கே.ஜி.எஃப் 2' படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அந்நிறுவனம் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. சுதா கொங்கராவின் முந்தைய படமான 'சூரரைப் போற்று' திரைப்படம் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் இந்த படமும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஒருவேளை அந்த படத்தைத்தான் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்த வேறு எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. விரைவில் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாலார் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் கதாநாயகி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aditi shankar to pair suriya in new film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ad

இப்படத்தை தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மத்தியில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இதே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.