Skip to main content

கொலை மிரட்டல் விடுத்த பெண்!!! நீதிமன்றத்தை நாடிய பிரபல இயக்குனர்...

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

Steven Spielberg

 

 

பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு பெண் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

ஹாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தன்னை சாரா சார் என்ற பெண் கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய அவர் துப்பாக்கி ஒன்று வாங்கியுள்ளதாகவும் புகார் அளித்தார். மேலும், அவர் சாராவிடம் இருந்து தனக்கும் தன் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாரா சார் என்ற பெண் அவர்களை நெருங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, சாரா சார் என்ற பெண் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவர் குடும்பத்தினரிடம் இருந்து குறைந்தது 100 யார்ட்ஸ் (300 அடி) தூரம் கடை பிடிக்க வேண்டும். 

 

சாரா சார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு அனுப்பிய ட்விட்டர் செய்தியில், "என்னுடைய ஐபி முகவரியை திருடியவர்களை தனிப்பட்ட முறையில் கொல்ல வேண்டும் என்றால் அதைச் செய்வேன், நான் கூறுவது புரிகிறதா" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடவுளை சந்தித்தோம்" ; ராஜமௌலி நெகிழ்ச்சி; கீரவாணி ஆச்சரியம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

ss rajamouli and keeravani meet Steven Spielberg

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி. 

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும், சிறந்த பாடல் பிரிவில்  'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் கீரவாணி விருதைப் பெற்றார். இது தொடர்பாக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவையும் கீரவாணியையும் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்த நிலையில் ராஜமௌலி புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆச்சரியத்துடன் கன்னத்தில் கை வைத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் "நான் இப்போது கடவுளை சந்தித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜமௌலியுடன் இசையமைப்பாளர் கீரவாணியும் உடன் இருந்துள்ளார். 

 

கீரவாணி ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்து, அவருடைய காதுகளில் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்னேன். அவர் நாட்டு நாட்டு பாடலைப் பிடிக்கும் என சொன்னார். என்னால் அதை நம்ப முடியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

Next Story

ஜுராசிக் பார்க் இயக்குனரின் அடுத்த படம்! டீசர் வெளியீடு!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
vsgswgws

 

ஜாஸ், ஈ.டி படங்கள் மூலம் பிரபலமாகி ஜுராசிக் பார்க் படங்கள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்ததாக இயக்கவுள்ள படம் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி'. இந்த வருடம் டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.