Skip to main content

“நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்”- வாய்ப்பு கேட்கும் ஸ்ரீரெட்டி

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது புகார் கூறினார். தற்போது இவர் மூன்று தமிழ் படங்களில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. அதனால் சென்னையில் வசித்து வருகிறார்.
 

sri reddy


ராகவா லாரன்ஸ் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்திருந்தார். இதற்கு கடந்த ஜூலை மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த ராகவா லாரன்ஸ், “ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ரிபெல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார். என்னை ஹோட்டல் அறையில் சந்திக்க வந்த போது ராகவேந்திரா சுவாமி படம் எல்லாம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலின் படுக்கை அறையில் சுவாமி படத்தை வைக்க? எனக்கு ஸ்ரீரெட்டியை பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது சமீபத்திய பேட்டிகளை பார்க்கும் போது அவரது நிலையை எண்ணி வருத்தமாக இருக்கிறது. நான் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிகளுக்கு நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும். சில நடன அசைவுகளை கற்றுத் தருகிறேன். அதன்படி நடனமாடி தனது திறமையை நிரூபிக்கட்டும். அப்படி நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச்சொல்வேன் என்ற பயமெல்லாம் அவருக்கு வேண்டாம். அவர் மிக எளிதான நடன அசைவுகளை செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் அது போதும். அது தான் முக்கியம். ஒருவேளை பத்திரிகையாளர்கள் முன் நடித்துக்காட்ட தயங்கினால் அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் தனது நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார் . இந்த அறிவிப்பை அவர் மீதுள்ள பயத்தால் நான் அறிவிக்கவில்லை. எனக்கு பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்கு கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்” என்று பதிவிட்டிருந்தார். 
 

devarattam


கடந்த வாரம் காஞ்சனா-3 வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் தற்போது காஞ்சனாவை ரீமேக் செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி காஞ்சனா 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர். உங்களில் எத்தனை பேர் என்னை மாஸ்டர் படத்தில் பார்க்க விரும்புகிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Next Story

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

Aishwaryaa rajinikanth directing raghava lawrence Durga durga film

 

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார். துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்கள் நிறைய இருப்பதால் துர்கா படத்திலிருந்து விலகியுள்ளனர். 

 

இந்நிலையில் 'துர்கா' படத்தை ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் '3', கெளதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'பயணி' என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது 'துர்கா' படத்தை இயக்க வேண்டும் என  கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கூட இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.