Skip to main content

ஸ்பைடர் மேனை காப்பாற்றுங்கள்! உலகளவில் வைரலாகும் ரசிகர்களின் குமுறல்கள்...

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியான பின்பு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிலிருந்து ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மார்வெல் யுனிவர்ஸின் 23வது படம் ஆகும். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 1.1 பில்லியன் டலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 375 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
 

spiderman

 

 

 

சோனி நிறுவனம் தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலை குவித்துள்ள பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது. இதனால் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வசூலை 400 மில்லியன் டாலர்களாக(இந்திய மதிப்பில் 2870 கோடி) உயர்த்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக நான்கு நிமிட காட்சியை இப்படத்தில் சேர்த்துள்ளதாம்.

 
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட திரையரங்களில் ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகிறது.

 
என்னதான் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அதன் உரிமையை சோனி நிறுவனம்தான் வைத்திருக்கிறது. ஸ்பைடர் மேன் படத்தை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இணைக்க 2015ஆம் ஆண்டு டிஸ்னியும் சோனியும் இணைந்து ஒரு ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்கும்போது இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க செலவு செய்யும் என்றும், படம் எடுத்த வசூலை டீலின்படி பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். தற்போதுவரை வெளியான ஸ்பைடர் மேன் இரண்டாம் பாகம் வரை இந்த டீல் சரியாக நடந்துள்ளது. ஆனால், இதனை தொடர்ந்து வரப்போகும் ஸ்பைடர் மேன் படத்தில் வசூலை பிரித்துக்கொள்வதில் முடிவு கிடைக்கவில்லை என்பதால் 2015ல் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஸ்பைடர்மேன் இனி மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களில் இந்த கதாபாத்திரம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள், இதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதுவரை வெளியான ஸ்பைடர்மேன்களிலேயே டாம் ஹாலந்து நடித்திருக்கும் அதுவும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருப்பதுதான் நன்றாக இருக்கிறது அதனால் இதை தொடர வெண்டும் என்று குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்பைடர் மேனுக்கு குரல் கொடுத்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

Shubman Gill to voice Indian Spider-Man Pavitr Prabhakar

 

ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ், ஜஸ்டின் கே. தாம்சன் உள்ளிட்ட 3 பேர் இயக்கத்தில் அவி ஆராட், ஆமி பாஸ்கல் உள்ளிட்ட 5 பேர் தயாரிப்பில் ஷமேக் மூர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'ஸ்பைடர் மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்'. இப்படம் வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ் ட்ரைலர் கடந்த மாதம் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர்களை கவரும் வகையில் இந்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் 10 இந்திய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்பைடர் மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய ஸ்பைடர்மேனாக 'பவித்ர பிரபாகர்' என்ற கதாபாத்திரம் இதில் அறிமுகமாகிறது. 

 

இந்த நிலையில் பஞ்சாபி மற்றும் இந்தி மொழிக்கு பவித்ர பிரபாகர் கதாபாத்திரத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து சுப்மன் கில் பேசுகையில், "ஸ்பைடர் மேன் கேரக்டரை பார்த்து தான் வளர்ந்தேன். இன்று அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார். 

 

 

 

Next Story

மார்வெல் நிறுவனத்துடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Junior NTR meeting with Marvel studios

 

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

 

இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருது, 'நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வழங்கப்பட்டது. முன்னதாக ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பேட்டியில் "மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது" எனக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர், அமெரிக்காவில் உள்ள மார்வெல் ஸ்டுடியோவின் நிர்வாகி விக்டோரியா அலோன்சோவை சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும் சில நிமிடங்களே பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மார்வெல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஏதேனும் வாய்ப்பு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.