Skip to main content

"இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்" - நடிகர் சௌந்தர ராஜா கவலை!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bgbdfsbsx

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சௌந்தர ராஜா மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த மாமனிதர் ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். சமூக நலனுக்காக போராடுவதில் இவர் ஒரு முன் மாதிரி. இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்து இருக்கிறேன். உங்கள் ஆத்மா இறைவனடி சேரட்டும் ஐயா" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்