Skip to main content

"ஷூட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார்...கதை எப்ப கேட்கலாம்" - பிரபல இயக்குநரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

sivakarthikeyan troll about venkat prabhu brother premji

 

சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (21.10.2022) தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மண்டேலா இயக்குநர் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்திலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ப்ரின்ஸ் படத்திற்காக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் ஒரு பகுதியாக தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் சிவகார்த்திகேயனிடம், "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்" என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் "ஷூட்டிங் எப்ப வேணாலும் போலாம் சார். ஆனா கதை எப்ப சார் கேட்கலாம்" என பதிலளித்துள்ளார். 

 

மேலும், "உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கு சார். அந்த படத்துல பிரேம்ஜி பிரதருடன் நான் எந்த ரோலில் நடிக்கிறேன். அத தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கேன் சார்" என ஜாலியாக பதிலளித்துள்ளார். வழக்கமாக வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் அவரது தம்பி பிரேம்ஜி இடம் பெற்றுவிடுவார். அதனை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். 

 

முன்னதாக ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதே போல் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவை கலாய்த்திருப்பார். அதில், "இவர் கதை இல்லாமல் கூட படமெடுப்பார். ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார். பேசாம...இவருக்கு தம்பியா பிறந்திருக்கலாம் போல..." என ஜாலியாக பேசியிருப்பார் என்பது நினைவு கூறத்தக்கது.   

 

சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் நடைபெற்ற  ‘ப்ரின்ஸ்’ பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து இயக்கி வரும் 'என்.சி 22' படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்த்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 விஜயகாந்தின் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் உருவான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013ஆம் ஆண்டில், காமெடி ஜானரில் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலம், ரசிகர்களை கவர்ந்த பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் ‘ரஜினிமுருகன்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம், சிவகார்த்திகேயனுக்கும், பொன்ராமுக்கும் திருப்புமுனையாக இருந்தது. 

இதனை தொடர்ந்து, மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனை வைத்து ‘சீமராஜா’ படத்தை பொன்ராம் இயக்கினார். வெற்றி கூட்டணி மூன்றாவது முறை இணைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படம், எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை அடைந்தது. அதையடுத்து, பொன்ராம் இயக்கிய எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி ஆகிய இரு படங்களும் படுதோல்விப் படங்களாக அமைந்தன. அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக, முன்னணி நடிகர்களுடன் பொன்ராம் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ‘சகாப்தம்’, மதுரவீரன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியனை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சண்முகபாண்டியன், தற்போது ‘படை தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.