Skip to main content

"என் நடிப்பில் பாதி ரஜினி சாரின் ஃபெர்பாமன்ஸ் தான் இருக்கும்" - சிவகார்த்தியேன்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Sivakarthikeyan about rajini in August 16 1947 Audio Launch

 

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆகஸ்ட் 16 - 1947'. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ரேவதி ஷர்மா. புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.  

 

அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "இப்படம் நமது சுதந்திரம் பற்றிய கதை. அது பற்றி சொல்லும் போது தனி மனிதனின் வாழ்க்கையிலே நிறைய வலிகள் வேதனைகள் இருக்கும். அடிமைப்பட்டு கிடந்த ஒரு நாடு பெரிய போராட்டம், நிறைய தியாகம் பண்ணியிருக்கும். இதையெல்லாம் சுவாரசியமாக எடுத்து இயக்குநர் கொடுத்துள்ளார். முதல் படமே இப்படிப்பட்ட கதையை எடுத்துள்ளார் என்று சொன்னால் அவர் வாழ்க்கையில் சவாலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். சவாலை சந்திக்க தயாரானவன் தான் சாதிக்க தகுதியானவன் என்று சொல்லுவாங்க. அந்த வகையில் இயக்குநர் தகுதியானவர் தான். படம் இந்தளவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் முருகதாஸ் சார். அவருக்கு இயக்குநர் கொடுக்கும் பரிசாக இப்படம் அமையும் என நம்புகிறேன். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவர் பேசும் போது ஒரு தொனியில் பேசுகிறார். பாடும் போது வேறொரு தொனியில் பாடுகிறார். அது மிகவும் நன்றாக இருக்கு. 

 

நான் திரையில் நடிக்கும் போது பாதி ரஜினி சாரின் சாயல் இருக்கும். அவருடைய ஃபெர்பாமன்ஸ் வந்திரும். நம்முடைய வெற்றி நமது கரியரை வரையறுக்கும். ஆனால் நம்முடைய கேரக்டர் தான் நமது வாழ்க்கையை வரையறுக்கும். அந்த வகையில் கவுதம் கார்த்திக் ரொம்ப ஸ்வீட். கல்யாணம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். அதற்கான ஆரம்பம் தான் கவுதம் கார்த்திக்கு இப்படம்." என்றார். மேலும் படக்குழுவினர் அனைவரையும்  வாழ்த்தினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி படத்தில் இணையும் ஸ்ருதிஹாசன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
shrtthi hassan to join rajini 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிரபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவரது இசையில் இனிமேல் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.