Skip to main content

“முதலில் டாக்டர் வெளியாகும் அடுத்துதான் அந்தப் படம்...” - சிவகார்த்திகேயன்

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

sk

 

நேற்று நடைபெற்ற தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்துவிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச்  சந்தித்தார். அப்போது அவர் தான் நடித்து வரும் படங்களான 'டாக்டர்', 'அயலான்' படங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில், “இந்தக் கரோனா காலத்தில் நாம் அனைவருமே பாரம்பரிய காலத்துக்கு வந்துவிட்டோம். யாரையாவது பார்த்தவுடன் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம். ஒழுங்காகக் கை கழுவிவிட்டுச் சாப்பிடுகிறோம்.

 

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வழக்கமான சூழலுக்குத் திரும்பும். தீபாவளிக்குப் படங்கள் வெளியானபோது, முதல் 2 நாட்களுக்கு மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு வந்துள்ளனர். இன்னும் புதிய படங்கள் வெளியாகும்போது, மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சஜக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரையரங்கம் மட்டுமல்ல அனைத்து வியாபாரமுமே அப்படித்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.

 

முதலில் 'டாக்டர்' வெளியாகும். பின்பு 'அயலான்' வரும். படங்கள் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். சில படங்கள் திரையரங்குகளில் வெளியானால் சரியாக இருக்கும். சில படங்கள் ஓடிடியில் வெளியானால் சரியாக இருக்கும். இன்றைய காலத்தை மனதில் வைத்து வியாபாரம் பண்ணுவதுதான் தயாரிப்பாளர்களின் எண்ணவோட்டமாக இருக்கும். படங்கள் எதில் வெளியானாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். அதுதான் என்னைப் போன்ற நடிகர்களின் ஆசை. மக்களுக்கு ரொம்பப் பிடிக்கும் கதைகளில் நடிக்கும்போது, கண்டிப்பாகப் போய்ச் சேரும்.

 

'டாக்டர்' படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் படமாக்கப்படவுள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தையுமே கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே படமாக்கிவிட்டோம். சின்னச் சின்ன காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. அதைத் தான் இப்போது படமாக்கினோம்” என்று கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் பட அப்டேட்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sivakarthikeyan produvtion movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.