கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'முஃப்தி'. இதன் தமிழ் ரிமேக்கை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிம்பு - கௌதம் கார்த்தியை வைத்து எடுக்க திட்டமிட்டார். அதன்படி, சிம்பு -கௌதம் கார்த்தியோடு முதல் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில காலத்திலேயே, சிம்பு படப்பிடிப்புக்கு வருவதில்லை என குற்றம் சாட்டினார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதனை தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பும் நின்று போனது.
இந்தநிலையில் உடலை குறைத்து, படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் சிம்பு, மீண்டும் 'முஃப்தி' பட தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், சிம்புவிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தொடர்ந்து சிம்பு, நிறுத்தப்பட்ட இப்படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளிக்கவுள்ளது.
மாநாடு படத்திற்கு பிறகு, சிம்பு 'முஃப்தி' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னடாவில் படத்தை இயக்கிய நரதனே, தமிழிலும் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். எனவே 'சில்லுனு ஒரு காதல்', ‘நெடுஞ்சாலை'ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா, இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.