Skip to main content

சில்க் ஸ்மிதாவை போன்ற அழகான கண்களுடைய ஒரு பெண்ணை தேடுகிறோம்... -இயக்குனர்

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
silk smitha

 

 

80-களிலும் 90-களிலும் தென்னிந்திய திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் நடன கலைஞராகவும் இருந்தவர் சில்க் ஸ்மிதா. படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடுகிறார், குறைந்த அளவிலே அவருக்கான கதாபாத்திரம் என்றாலும் அவருக்காகவே சினிமா பார்க்க வந்தவர்கள் பலர் உள்ளனர். இதனால் இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்தார்.

 

சில்க் ஸ்மிதா என்றழைக்கப்படும் விஜயலட்சுமி வறுமை காரணமாகவும், கனவுகளை சாத்தியப்படுத்தவும் தன்னந்தனியாளாக வீட்டை விட்டு வெளியேறி பல சிரமங்களுக்கு பின் சினிமாவில் கோலோச்சினார். ஆனாலும், அவருடைய வாழ்க்கை ஒரு மிகப்பெரிய போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும், அதனை அவர் வெளியுலகத்திற்கு காட்டியதாக தெரியவில்லை. சினிமாவில் வெற்றிநடை போட்டுகொண்டிருந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்துகொண்டார். 

 

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையும், அவர் சந்தித்த போராட்டங்களையும் அடிப்படையாக வைத்து ‘அவள் அப்படித்தான்’ என்கிற தலைப்பில் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும், முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர். பல விளம்பரப் படங்களை இயக்கியவரும், “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தை இயக்கியவருமான மணிகண்டன் இந்த படத்தை இயக்குகிறார்.

 

"சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அவருடைய காந்தக் கண்கள். அப்படிப்பட்ட அழகான கண்கள் உடைய ஒரு அழகான பெண்ணை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார் இப்படத்தின் இயக்குனரான மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான் இந்தியா படமாக உருவாகும் சில்க் ஸ்மிதா பயோ-பிக்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

silk smitha biopic starring chandrika ravi update

 

சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

'நான் செத்துட்டா இறுதிச் சடங்கிற்கு நீ வருவியா'; சில்க் ஸ்மிதா கேட்ட கேள்வி; இறுதிச் சடங்குக்கு வந்த அந்த ஒரே நடிகர்

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

 'Will you come to the  my funeral die?'; asked Silk Smitha; He was the only actor who came to the funeral

 

தமிழ்த் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர்களில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் கொடி கட்டிப் பறக்கின்றன. தற்போதைய படங்களில் வரும் 'ஐட்டம் சாங்ஸ்' என்று சொல்லப்படும் வகையில் அந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க பாடல்களில் ஆடி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர். ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா இருந்தால்தான் ஒரு பொழுதுபோக்குப் படம் முழுமையடையும் என்று சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்தனர் இயக்குநர்கள்.

 

அவரது கண்களைப் பார்த்தாலே ரசிகர்கள் கிறங்கிப் போவார்கள். மேலும் அவரது கவர்ந்திழுக்கும் வனப்பும், மாடர்ன் டிரஸ்களும் கூடுதல் ப்ளஸ் பாயிண்ட்டாகவே இருந்தது. இதுவே குறுகிய காலத்தில் அவர் உச்சத்திற்குச் செல்லக் காரணமாக இருந்தது. எப்படி சினிமாவின் உச்சத்திற்குக் குறுகிய காலத்தில் சென்றாரோ, அதேபோல் குறுகிய காலத்திலேயே மண்ணுலகையும் விட்டு விடை பெற்றார் ஸ்மிதா. . 

 

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி நடிகை சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகமே இந்தச் சம்பவத்தால் சோகத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியது. அவருடைய தற்கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில், ''அவரின் இறுதிச் சடங்கிற்கு திரையுலகைச் சேர்ந்த யாரும் வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும்தான் வந்திருந்தார். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை சில்க் ஸ்மிதா நடிகர் அர்ஜுனிடம் 'நான் இறந்து போனால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா' எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட அர்ஜுன், ‘ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இதெல்லாம் என்ன பேச்சு' என சில்க் ஸ்மிதாவிடம் தெரிவித்துள்ளார். நாட்கள் செல்லச் செல்ல இந்த விஷயத்தை அர்ஜுன் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்ததோடு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' எனத் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் தோட்டா பாவாநாராயணா.