Skip to main content

7 வருடங்கள் கழித்து களமிறங்கும் சித்தார்த்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

sidharth

 

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் சித்தார்த். மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல வருடங்களாக தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சித்தார்த் தற்போது 7 வருடங்களுக்குப் பின் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

'ஆர்.எக்ஸ்.100' இயக்குனர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சித்தார்த்.

 

'மஹா சமுத்திரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Siddharth joins hands with Vijay Sethupathi's director

 

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' , 'சேதுபதி', 'சிந்துபாத்' படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்தான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Actor Siddharth has madecontroversial comment about saina nehwal

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிர டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நடிகர் சித்தார்த்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  இதனிடையே நடிகர் சித்தார்த் தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.