Skip to main content

இது கீழ்படிதலின் சிறந்த சாட்சி- சிஎஸ்கே தோல்வி குறித்து சித்தார்த்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஐபிஎல் தொடரின்  இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
 

sidharth

 

 

12வது ஐபிஎல் சீசன்  தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை ஹைதராபாத்தில் நடந்த இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 2013, 2015, 2017 ஆம் ஆண்டு என தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.

 
ஹைதராபாத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்களை இலக்காக வைத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.
 

மும்பை  அணியில் அதிகபட்சமாக போல்லார்டு 41 ரன்களையும், குயின்டன் டி காக் 29 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக வாட்சன் 80 ரன்களையும்,  பிளஸ்சி 26 ரன்களையும் எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது சென்னை அணி.
 

 

இந்நிலையில் நேற்று நடந்த மேட்ச் குறித்து தமிழ் திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்தனர். நடிகர் சித்தார்த்தும் தொடக்கத்திலிருந்தே இந்த வருட ஐபிஎல் முக்கிய மேட்ச்கள் குறித்து ட்வீட் செய்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற மேட்ச் பற்றியும் பேசியுள்ளார். அதில், “என்ன ஒரு ஃபைனல். நன்றாக ஆடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். எந்த ஒரு ஃபைனலும் இந்த அளவுக்கு நூலிழையில் சென்றிருக்காது. இந்த மேட்ச் எப்படி மாறியது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. ஒரே அணியிடம் 4 முறை தோற்பது என்பது கீழ்படிதலின் சிறந்த சாட்சி” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Siddharth joins hands with Vijay Sethupathi's director

 

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை', 'அருவம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் சித்தார்த்தின் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' , 'சேதுபதி', 'சிந்துபாத்' படங்களை இயக்கிய அருண் குமார் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்தான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

 

 

Next Story

சாய்னா நேவாலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் கடிதம்

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Actor Siddharth has madecontroversial comment about saina nehwal

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிர டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் படி வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நடிகர் சித்தார்த்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  இதனிடையே நடிகர் சித்தார்த் தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.