Skip to main content

பாய்காட் பாலிவுட்டுக்கு குட் பாய் சொன்ன ஷாருக்கான்

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

sharukhan pathaan movie box office collection

 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருப்பதாக இந்துத்துவர்கள் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சை எழுந்தது. 

 

முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர்களை திரைப்படங்கள் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்துவதாக ஒரு தகவல் வெளியானது. பின்பு படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்”  எனத் தெரிவித்திருந்தனர். 

 

இப்படி ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பை சம்பாதித்த பதான் படம் ஒருவழியாக சொன்ன தேதியில் எந்த தடங்கலும் இன்றி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளிலே ரூ. 100 கோடி, அதற்கு அடுத்த நாள் ரூ. 100 கோடி என இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.219.6 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. நேற்றுடன் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் மூன்றாவது நாள் வசூல் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூலிக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

இரண்டு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதால் ஷாருக்கான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் துவண்டு கிடந்த பாலிவுட்டை ஷாருக்கான் தூக்கி நிறுத்தியது போல பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பிற்கு பிறகு பாய்காட் (#boycottbollywood) கலாச்சாரம் பெரிய அளவில் பேசப்பட்டு, பலரது படங்களை அது பாதித்தது. அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அக்ஷய்குமார் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் பெரும் தோல்வியையும் நஷ்டத்தையும் சந்தித்தது. 

 

இந்த பாய்காட் கலாச்சாரம் ஷாருக்கானின் பதான் படத்துக்கும் வர, படம் தோல்வியை சந்தித்து விடுமோ என்ற அச்சம் ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அதெற்கெல்லாம் குட்பாய் சொல்வது போல வசூலை வாரி குவித்து வருகிறது பதான். இதனால் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் சரிவை நோக்கி சென்ற நிலையில் தற்போது பதான் படம் அதை சரி செய்துள்ளது போல் தெரிகிறது. தொடர்ந்து இது நிலைக்க வேண்டும் என்பதே தற்போது பாலிவுட் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.