Skip to main content

ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தின் பெயர் இதுதானா? இந்தியளவில் ட்ரெண்ட்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் பட்டறையிலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு ராஜா ராணி எனும் படத்தை இயக்கியவர் அட்லி. முதல் படம் போலவே தெரியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக அந்த படத்தை இயக்கியிருந்தார். படமும் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி என்றொரு படத்தை இயக்கினார். இந்த படமும் விஜய் நடித்த படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து ஒரு சாதனையை செய்தது. தன்னுடைய குருநாதார் ஷங்கரை வசூல் வேட்டையில் மிஞ்சிவிடுவார் அட்லி என்கிற அளவிற்கு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பேசப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போதுவரை இயக்கியுள்ள இரண்டு படங்களுமே நடிகர் விஜய்யை வைத்துதான்.
 

atlee sharuk khan

 

 

இப்படி ஒவ்வொரு படத்திலும் விஜய் என்னும் பெரிய நடிகருக்கு தேவையான மாஸ், அவருடைய பார்க்க வரும் குடும்ப ரசிகர்களுக்கு தேவையான கருத்து, செண்டிமெண்ட் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி கதைகளிலும், திரைக்கதையிலும் பெரிதாக சிரமம் இல்லாமல் வசூலில் சாதனை படைத்து வரும் இவருடைய படங்கள், அடுத்து அட்லி யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரவில்லை.

பல வருடங்களாக ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட்டாகி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஒரு நல்ல வெற்றியை அட்லி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ஷருக்கும் அட்லியும் ஒன்றாக இணைந்து படம் பணிபுரிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என தகவல் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆமாம், வருகிற நவம்பர் 2ஆம் தேதி ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.