Skip to main content

ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் படத்தின் பெயர் இதுதானா? இந்தியளவில் ட்ரெண்ட்...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்ற ஷங்கரின் பட்டறையிலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு ராஜா ராணி எனும் படத்தை இயக்கியவர் அட்லி. முதல் படம் போலவே தெரியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக அந்த படத்தை இயக்கியிருந்தார். படமும் செம ஹிட் அடித்ததை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி என்றொரு படத்தை இயக்கினார். இந்த படமும் விஜய் நடித்த படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து ஒரு சாதனையை செய்தது. தன்னுடைய குருநாதார் ஷங்கரை வசூல் வேட்டையில் மிஞ்சிவிடுவார் அட்லி என்கிற அளவிற்கு தன்னுடைய இரண்டாவது படத்திலேயே பேசப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போதுவரை இயக்கியுள்ள இரண்டு படங்களுமே நடிகர் விஜய்யை வைத்துதான்.
 

atlee sharuk khan

 

 

இப்படி ஒவ்வொரு படத்திலும் விஜய் என்னும் பெரிய நடிகருக்கு தேவையான மாஸ், அவருடைய பார்க்க வரும் குடும்ப ரசிகர்களுக்கு தேவையான கருத்து, செண்டிமெண்ட் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி கதைகளிலும், திரைக்கதையிலும் பெரிதாக சிரமம் இல்லாமல் வசூலில் சாதனை படைத்து வரும் இவருடைய படங்கள், அடுத்து அட்லி யாருடன் கூட்டணி சேரப்போகிறார் என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரவில்லை.

பல வருடங்களாக ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட்டாகி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஒரு நல்ல வெற்றியை அட்லி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ஷருக்கும் அட்லியும் ஒன்றாக இணைந்து படம் பணிபுரிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என தகவல் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆமாம், வருகிற நவம்பர் 2ஆம் தேதி ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.